செவ்வாய், அக்டோபர் 25, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.



எங்கே சென்றது பாரம்பரியமிக்க தமிழர் பண்பாடு ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எங்கே சென்றது பிறன் மனைவியை தன் சகோதரியாய் பார்த்த பாரம்பரியமிக்க தமிழர் பண்பாடு ?

சென்னை, பெங்களு}ர், மும்பை போன்ற தொழில் நகரங்களில் பணிபுரியும் பொறியாளர்கள், மருத்துவர்கள் விடுமுறை நாட்களிலும் கூட சொந்த ஊர் செல்ல முடியாத அளவுக்கு எந்த நேரமும் பிஸியாக இருப்பார்கள். பாக்கெட் நிறைய பணத்தையும், மணிப்பர்ஸ் நிறைய கிரெடிட் கார்டுகளையும் அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் அவர்களிடம் சில இளம்பெண்கனின் புகைப்படங்களை காட்டி குறிப்பிட்ட நாட்களுக்கு பெருந்தொகையை பேரம் பேசி அப்பெண்களின் கழுத்தில் தாலியைக் கட்டி வாடகை மனைவியாக அவர்களிடம் குடும்பம் நடத்த விடுகின்றனர் விபச்சார புரோக்கர்கள்.

காரணம் லாட்ஜ்களில், பீச்சுகளில் மாட்டிக் கொண்டால் இவர்களின் படிப்புக்கும், பதவிக்கும் பங்கம் ஏற்படும் என்பதால் கழுத்தில் தாலியுடன் வலம் வந்தால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்களாம்.

இவர்கள் வெளியில் நடந்து சென்றால் ஒரிஜினல் கணவன், மனைவி தோற்றுவிடும் அளவுக்கு இவர்களது பாவனைகள் இருக்கும் என்றும் இவர்கள் தங்களின் பொழுதை கழிப்பதற்கு அதிகமாக ஊட்டி, கொடைக்கானலை தேர்வு செய்கின்றனர் என்றும் இந்த நூதன விபச்சாரத்தை கண்டு பிடித்து அறிவித்தது டூரிஸ்ட் கெய்டுகள் தான் என்றும் ஒரு பார்ப்பன பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் ஒருவனுக்கு ஒருத்தி என்றும், பிறன் மனைவியை தன் சகோதரியாய் பார்த்த தமிழர் பண்பாடு  மாறி விட்டது என்றும் அழுது புலம்பி இருந்தது அவ்வாறு அழுத கண்களின் ஈரம் காய்வற்குள் ஈரானில் விபச்சாரம் செய்த பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது காட்டுமிரான்டித்தனம் என்ற கூக்குரலையும் சேர்த்தே அடுத்த நாள் பிரசுரத்தில் எழுப்பி இருந்தது.   

என்ன இவர்களின் நிலைப்பாடு என்று அவர்களுக்கும் புரிவதில்லை அவர்களின் பத்திரிகைகளை வாசிப்பவர்களுக்கும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

கல்லெறி தண்டனையை காட்டுமிராண்டி சட்டம் என்றுக்கூறி விபச்சாரத்தை ஃப்ரீ பண்ணிய மேற்கத்திய கலாச்சாரத்திற்கு வழிதிறந்து விட்டு எயிட்ஸ் எனும் உயிர் கொல்லி நோயை பாரம்பரியப் பண்பாடு மிக்க தமிழர்களுக்குப் பரிசாக பெற்றுக் கொடுத்ததை மறந்துவிட்டு, அல்லது மறைத்துக்கொண்டு விபச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கல்லெறி தண்டனையை இஸ்லாமிய சட்டம் என்பதால் அதைக் காட்டுமிராண்டி சட்டம் என்றுக்கூறி புழங்காகிதம் அடைகின்றனர்.

தனக்கு உரிமை இல்லாதவளை அனுபவிப்பதை நாகரீக கலாச்சாரம் போல் மேற்கத்தியர்களால் பரப்பப்பட்டக் காரணத்தால் கலாச்சாரப் பாரம்பரியமிக்க இந்தியாவில் ஒளிந்து, மறைந்து நடந்த இந்த ஈனச்செயல் இன்று இது ஒரு மேட்டரே இல்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிக்கைக்கு சிறையிலிருந்து கொண்டு டாக்டர் பிரகாஷ் அளித்தப் பேட்டியில் அன்று நான் செய்தது பெரிய மேட்டராக கருதி ஏராளமான செக்ஷன்களில் வழக்குப் பதிந்து வெளியில் வரமுடியாத அளவுக்கு என்னை சிறையில் தள்ளினார்கள் இன்று அதையே சாமியார்கள் முதல் சாமானியர்கள் வரை செய்யத் தொடங்கியதால் அது சாதாரண மேட்டராக மாறி என் மீது பதியப்பட்ட ஏராளமான செக்ஷன்கள் தள்ளுபடி ஆகி வருகிறது அதனால் கூடியவிரைவில் குற்றமற்றவன் என்ற தீர்ப்பில் வெளியில் வருவேன் என்றுக் கூறி இருக்கிறார். 

அவர் கூறியதை இன்னும் உண்மைப்படுத்தும் விதமாக சமீபத்தில் திருமனத்திற்கு முன்பு விரும்பியவர்களிடம் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றுக்கூறிய சினிமா நடிகையின் நச்சுக் கருத்தை ஆதரித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் அளவுக்கு குப்பை மேட்டராகி விட்டதால் மெரீனா கடற்கரை பட்டப்பகலிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அசிங்கங்கள் அறங்கேறி போலீஸாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. 

என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பிதுங்கிய போலீஸார் இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக செல்போனில் சில ஜோடிகளின் அத்து மீறலை படமெடுத்து இதை உங்கள் பெற்றோரிடம் காட்டிவிட்டு பத்திரிகைக்கு கொடுத்து பிரசுரிப்போம் என்று மிரட்டியதும் காலில் விழுந்து கதறி அழுது இனிமேல் இந்தப் பக்கமே வரமாட்டோம் என்றுக் கூறி ஓட்டம் பிடித்துள்ளனர்.

தனித்து வழங்கப்படும் எந்த தண்டனையையும் உடலாலும், மனதாலும் தாங்கிக் கொள்ளும் மனிதனால் பிறர் பார்க்க நிறைவேற்றப்படுவதை சகித்துக்கொள்ள முடியாமல் வெட்கி தலைகுணியும் நிலையில் உடலில் இயங்கும் செல்களை இறைவன் அமைத்திருப்பதால் தான் விபச்சாரம் செய்தவர்களை பொது இடத்தில் நிருத்தி பிறர் பார்க்க தண்டனையை நிறைவேற்றுங்கள் அவ்வாறு நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டுபவர்கள் பாவியாகி விடுவீர்கள் என்று ஆயிரத்தி நானூரு வருடங்களுக்கு இறைவன் தன் திருமறையில் கூறி எச்சரிக்கை செய்தான். 

எந்த நிலையிலும் ஒரு மனிதனால் இன்னொரு மனிதன் பாதிக்கப்படுவதை, இஸ்லாம் அனுமதிக்கவே இல்லை. எயிட்ஸ் கிருமி தாக்கிய ஒரு பணக்காரன் பணத்தை வாரி இரைத்து கூடுதல் சிகிச்சையை பெற்றுக்கெண்டு வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமூகத்தில் வாழ்கிறான். அதே எயிட்ஸ் கிருமி தாக்கிய ஒரு ஏழை அரசு மருத்;துவமனையில் இலவச சிகிச்சைப் பெறுவதால் அரசு மருத்துவரால்; எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அதனால் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்கிறான்.

விபச்சாரம் தீமை என்பதாலும் அதனால் பிறர் பாதிக்கப்படுவதாலும் அந்த தீமையைப் பரவ விடாமல் தடுப்பதற்காக தண்டனையை கடுமையாக்கியது இஸ்லாம். அதனால் பாரம்பரியம், பாரம்பரியமாய் பேணி வந்த இஸ்லாமிய கலாச்சாரமும் மாறவில்லை, அதை நடைமுறைப் படுத்திய நாடுகளில் எயிட்ஸ் நோயும் பரவ வில்லை.

விபச்சாரம் செய்தவர்களில் நான்கு ஜோடிகளைப் பிடித்து சென்னையில் ஒன்று, மதுரையில் ஒன்று, திருச்சியில் ஒன்று, கோவையில் ஒன்று பொதுமக்கள் முன்னிலையில் நிருத்தி அரசு கல்லெறி தண்டனையை வழங்கினால் அதன் பின் மாறிப்போன பிறன் மனைவியை தன் சகோதரியாய் பார்த்த தமிழர் பண்பாட்டை வெகுவிரைவில் மீட்டெடுத்து நிலை நிருத்த முடியும். இல்லை என்றால் இனி ஒரு காலத்திலும் பிறன் மனைவியை தன் சகோதரியாய் பார்த்த தமிழர் பண்பாடு மரபுமிக்க தமிழர் கலாச்சார வரலாற்றுப் பெண்ணேடுகளிலிருந்தே அழிக்கப்பட்டுவிடும்.

பாரம்பரியம், பாரம்பரியமாய் காத்து வந்த தமிழர் பண்பாடா ? இஸ்லாத்தை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற மனமுரண்டா ? சிந்தித்தால் சீர் பெறலாம் !

உணர்வுக்கு எழுதியக் கட்டுரை


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்