செவ்வாய், செப்டம்பர் 13, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

وَلاَ تَقْرَبُواْ الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاء سَبِيلاً

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. அல்குர்ஆன். 17:32.




சங்கராச்சார்ய  சுவாமி(?)கள்.

பக்தர்களை சந்தித்து முடித்து ஜெயேந்திரர் ஓய்வு எடுக்கும் மதிய நேரத்திலேயே ஒவ்வொரு முறையும் சந்திப்பு நடந்தது. அந்த அறையில் ஒரு மூலையில் காணிக்கையாக வந்த பணத்தை எண்ணிப் பிரித்து அடுக்கும் வேலையில் வேத பாடசாலை மாணவர்கள் மும்முரமாயிருப்பார்கள். மற்றபடி நான் என்னை அழைத்துப் போகும் பெண்மணி ஜெயேந்திரர் என்று மூவர் மட்டுமே அந்த அறையில் இருப்போம். பத்திரிகை பற்றி பேசும்போது யாருடைய இடையூறும் இருக்க வேண்டாம் என்று அந்த மாணவர்களை ஜெயேந்திரர் வேறு வேலையாக வெளியே அனுப்பி விடுவதும் உண்டு.

முதல் நான்கு சந்திப்புகளில் ஆன்மீகத்தைப் பற்றியே இருந்த ஜெயேந்திரரின் பேச்சு திடீரென்று ஆபாசத்திற்கு மாறியது. அதிர்ந்து போனேன். எழுதிக்கொண்டிருந்ததிலிருந்து நிமிர்ந்து பார்த்தால் மேலும் அதிர்ச்சி. என்னை அழைத்துப் போயிருந்த பெண்மணியும் அவரும் இருந்த நெருக்கமான நிலை கண்டு பதறியதால் தாக்கப்பட்டவள் போல் நிலை குலைந்து போனேன்.

காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர் கேவலமான காமுகன் பேசுவது போல் சில தகாத வார்த்தைகளைச் சொல்லி என்னைப் பற்றியும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆத்திரமும், அதிர்ச்சியும் என்னை நடுக்க பதறி எழுந்தேன். ச்சீ, நீ ஒரு மனுஷனா, என்று கத்தினேன். இது உனக்குக் கிடைக்கும் பாக்கியம் என்று அந்தப் பெண்ணும் ஏதோ உளறினாள். வழக்கம் போல இவகிட்டயும் சொல்லித்தானே அழைச்சிட்டு வந்தே, என்று அவர் அந்தப் பெண்ணிடம் கேட்டு இல்லை என்று அவள் சொன்னதால் அதிர்ந்தார். அவளைப்பலவாறு திட்டினார். உடனடியாக அந்த அறையை விட்டு வெளியெற முற்பட்டேன். அந்த பெண் என்னைவிட வலுவானவள். தடுத்து நிறுத்தினாள்.-அனுராதா ரமனன்.




திருமணம் வெட்கத் தலத்தை பாதுகாக்கக் கூடியது.

விவாகம் (திருமனம்) செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக்கொள்ளாதவர்கள் அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை -அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். . . . அல்குர்ஆன் : 24:33

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓ! இளைய சமுதாயமே! உங்களில் எவர் திருமண (ம் செய்து கொள்வதற்குச்) சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்தக் கூடியது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கக் கூடியது . எவர் அதற்குச் சக்தி பெற வில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்! திண்ணமாக நோன்பு அவருக்கொரு கேடயமாகும்! ஆதார நூல்கள்: (புகாரி, முஸ்லிம்).


சங்கராச்சார்யார் அவர்களே !
பேசும் தெய்வமாக அப்பாவி ஹிந்துக்களால் வணங்கப்படும் சந்நியாசிகள் வரிசையில் இன்றும் பிரபலமாகப் பேசப்படும் சந்நியாசினிகளும் உடல் ரீதியான இயற்கையின் தேவைக்கு தங்களை தவறான முறையில் அர்ப்பனித்துக் கொண்டு ஹிந்து மத (போலி) துறவரத்தைக் காலில் போட்டு மிதித்துக் காற்றில் பறக்க விட்டவர்கள் தான் என்பதை உங்களின் (அவாள்களின்) ஊடகங்களே வெட்ட வெளிச்சமாக்கின என்பதை நாடறியும்.

நீங்கள் போலியாக உண்டாக்கிக் கொண்ட துறவரம், சந்நியாசம் போன்றவைகள் இறைவன் மனிதனுக்கு உருவாக்கிக் கொடுத்த இயற்கை தேவையின் கீழ் சரணடைந்ததை அனுராதா ரமனன் கண்ணீர் மல்க அளித்தப் பேட்டி நிரூபித்தன. பல வேலைகளில் உங்களாலும், உங்கள் சந்நியாச - சந்நியாசினிகளாலும் இஸ்லாமிய திருமண சட்டங்கள் கேலிக்கூத்தாக சித்தரிக்கப்பட்டு மேடைதோறும் எள்ளி நகையாடப்பட்டன.

ஏக இறைவனுக்கு முன் மண்டியிட வேண்டிய மனிதராகிய நீங்கள் உங்களுக்கு முன் கோடானு கோடி இந்தியர்களின் முதல் குடிமகனையும் ( ஜனாதிபதியை ) கூட மண்டியிடச்செய்தீர்கள். இன்று நீங்கள் கோடானு கோடி மக்கள் முன் தலைகுனிந்து நிற்கிறீர்கள். இங்கு தான் ஓரிறையின் மாட்சிமை மங்காமல் ஒளிர்ந்ததைக்காண முடிந்தது. கீழக்கரை முஸ்லீம் தொழிலதிபர் தங்கள் சகோதர முஸ்லுpம்,ஹிந்து ஏழைகளுக்கு கொடுத்து அவர்களுடைய துயர் துடைக்க முன் வராத அவர் உங்களின் காலடியில் 70 சவரனைக் கொட்டி அத்துடன் உங்கள் முன் தனது சுயமரியாதையை இழந்து கூனிக்குருகி நின்றார். தற்பொழுது உங்கள் சுயரூபத்தை அறிந்து அவருடைய சமுதாய மக்களிடத்தில் அவர் கூனிக்குருகி நிற்கிறார். தனது சமுதாயத்தில் எண்ணற்ற ஏழைகள் வறுமையில் உழன்டு வருகையில் அவர்களை பொருட்படுத்தாமல் உங்களை மதித்து உங்கள் காலடியில் கொட்டினார் இது அவருக்கு மட்டும் படிப்பினை அல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் மாபெரும் படிப்பினையாகும். பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும்.

நபிகள் நாயகத்தின் வரலாற்றில் ஓர்நாள் :
முஆத் பின் ஜபல் என்கிற நபித்தோழர் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பி வருகிறார்கள் நபிகள் நாயகம் அவர்களிடம் கீழ்கானுமாறு கூறுகிறார்கள்.

ஏக இறைவனின் திருத்தூதர் அவர்களே ! நான் பல நாடுகளுக்கும் வியாபார நிமித்தம் சென்றுள்ளேன் அங்கெல்லாம் மக்கள் அவர்களுடைய மன்னர்களுக்கு குனிந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கண்டேன் , உங்களுக்கு சாஷ்டாங்காம் செய்யலாமா ? நீங்களோ இறைவனுடைய தனிப்பெரும் தூதர், அதற்கு தாங்கள் மிகவும் தகுதியானவராயிற்றே. எனக்கூறுகிறார்கள்.

அதற்கு நபியவர்கள் : முஆதே ! இந்த மடமையிலிருந்து மனிதர்களை விடுவிக்கவே நான் நபியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். உலகத்தில் யாராவது யாருக்காவது சாஷ்டாங்கம் செய்யலாம் என இருந்தால் மனைவியை கணவனுக்கு சாஷ்டாங்கம் செய்யச் சொல்லி இருப்பேன் ஆனாலும் அது இறைவனுக்கே உரித்த தனி உரிமையாகும் என்பதால் அதையும் தடை செய்கிநேன். நபிமொழி

மடமைக்கு அந்த இடத்திலேயே சாவுமணி அடித்தார்கள் அதனால் இன்று உலகில் வாழும் 75 சதவிகிதத்திற்கு மேலான மக்களுடைய மனதில் நபிகளார் நீங்காத இடம் பெற்றவர்களானார்கள்.


நபிகள் நாயகத்தின் வரலாற்றில் மேலும் ஒரு நாள்.
நபிகள் நாயகம் ஒரு சபைக்கு வருகிறார்கள் அப்பொழது அவர்களைக் கண்டதும் அவர்களுடைய தோழர்கள் எழுந்து நிற்கிறார்கள். எழுவதைக் கண்டதும் நபிகளார் தடுக்கிறார்கள்.
 
எவரொருவர் அல்லாஹ்வின் அடிமைகள் தனக்கு எழுந்து நிற்பதைக்கண்டு சந்தோஷம் அடைகின்றாரோ, அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும். நூல் புகாரி,
 
எனக்கூறி அங்கேயே மனிதனுக்கு மனிதன் எழுந்து நிற்கும் மரியாதை எனும் அடக்கு முறையை ஒடுக்குகிறார்கள், மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதை ஏற்றுக்கொள்கிற மனிதன் தனது இருப்பிடத்தை நரகில் ஆக்கிக்கொள்ளட்டும் என்றால். தனதுமுன் நெடுஞ்சான்கிடையாக மனிதர்களை வீழ்ந்து கிடக்கவைத்த உங்களுடைய நிலை நரகில் எதுவாக இருக்கும் ? ? ?.


இறைவனின் இறுதி நபியின் வாழ்வில் மேலும் ஒரு நாள்
ஒரு திருமனத்திற்கு நபியவர்கள் செல்கிறார்கள் அங்கு ஒருசிருமி நபியவர்களைப் புகழ்ந்து பாடுகிறாள். அப்பாடலை நபிகள்நாயகம் செவியேற்றதும் உடனடியாக நிருத்தும்படிக் கோருகிறார்கள் அத்துடன் மரியமின் மகன் ஈசாவை (ஏசுநாதரை) புகழ்ந்தது போல் என்னைப் புகழாதீர்கள், நான் மரனித்தப்பின் எனது மண்ணறையை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள். (மிஷ்காத்எனக்கூறி சமாதி வழிபாட்டிற்கு அங்கேயே சமாதி கட்டி விடுகிறார்கள்.

அண்ணல் நபியவர்கள் தான் பிறரால் புகழப்படுவதை தடை செய்தார்கள், தனக்குப் பிறர் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள், தனக்கு சாஷ்டாங்கம் செய்வதை தடை செய்தார்கள்.

 
மேற்கூறப்பட்டவைகள் மனிதர்களால் தன்னைப்போன்ற பிற மனிதனுக்கு நிகழ்த்தப்பட்டால் அவன் தன்னை தெய்வத்துக்கு நிகராக ஆக்கிக் கொள்வான். அல்லது அவன் மரனித்தப்பின் மக்களால் அவன் தெய்வமாக்கப் படுவான் என்று நபியவர்கள் உணர்ந்ததால் அப்புகழ்ச்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய சிறிதும் தயங்க வில்லை. அதனால் இன்று அவர்கள் மாமனிதர் எனும் அந்தஸ்தில் நிலைத்துள்ளார்கள், அத்துடன் அவர்கள் அறிமுகப்படுத்திய கடவு
ள் கொள்கை இன்றளவும் கிஞ்சிற்றும் சிதறாமல் நிலைபெற்றுள்ளன அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

ஆனால் நபியவர்கள் திருமனத்தை தடைசெய்ய வில்லை, திருமனம் செய்தார்கள், திருமனம் எனது வழி முறை என முழங்கினார்கள். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்தக் கூடியது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கக் கூடியது. மனிதன் குறிப்பிட்ட ஒரு பருவ வயதை அடைந்து விட்டால் மோகத்தின் வேகத்தை தடுத்து நிருத்த முடியாது. அதற்கு திருமனம் எனும் கடிவாளம் பூட்டியே ஆகவேண்டும். இல்லையெனில் மோகக்குதிரை தறி கெட்டு ஓட ஆரம்பித்து விட்டால் ? வழக்கம் போல இவகிட்டயும் சொல்லித்தானே அழைச்சிட்டு வந்தே, என்று அவர் அந்தப் பெண்ணிடம் கேட்டு இல்லை என்று அவள் சொன்னதால் அதிர்ந்தார். எனும் விபச்சாரத்திற்கு வென்சாமரம் வீச வேண்டி வரும்.

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இத்தகையவர்களது இதயங்கள் சோதனைக்கு மேல் சோதனைக்கு உள்ளாக்கப் படுகின்றது, அதனால் பாதிக்கப்படும் இதயத்தில் கறுப்பு நிற கறை படிய ஆரம்பிக்கின்றது, இந்தக் கறுப்புக்கறை முற்றிலும் இதயத்தில் பரவி, அதனை மூடி விடுகின்றது, அத்தகைய இதயத்தினால் எந்த நன்மையானவற்றை ஏற்றுக் கொள்ளவோ அல்லது தீமைகளைக் கலைந்து விடவோ இயலுவதில்லை, அவனது இச்சை எதனைச் செய்யத் தூண்டுகின்றதோ அதனைத் தவிர - ஆதார நூல் : முஸ்லிம் 144
 
எல்லா நேரமும் மக்களை மோத விட்டுக் கொண்டிருப்பது தான் அல்லாஹ்வின் வேலையா என்றுக் கூறி நக்கலடித்தீர்கள்

சங்கராச்சார்யார் அவர்களே ! நீங்கள் சாதாரண ஒரு மனிதன் தான் வணக்கத்திற்குறியவர் அல்ல. உங்களுக்கும் உங்கள் முன் மண்டியிட்டவர்கள் எல்லோருக்கும் சேர்த்து இறைவன் உணர்த்திய மாபெரும் பாடம் தான் உங்களுடைய கொலை கேஸையும், செக்ஸ் கேஸையும் வெளி உலகுக்குக் கொண்டு வந்தது.

திருமனம் மூலம் தாம்பத்யத்தில் ஈடுபட்டால் தான் அவர்களைப் போன்ற அடுத்த ஜோடிகள் உருவாகும் இனப்பெருக்கம் ஏற்படும் என்பது இறைவனுடைய ஏற்பாடு. இந்த அற்புதமான ஏற்பாட்டை களங்கப் படுத்தினீர்கள், அதற்கு மாறு செய்தீர்கள் திருமனம் செய்யாதவர்கள் தான் புனிதர்கள் எனும் மாயையை உருவாக்கினீர்கள். உங்களுடைய முன்னோர்கள் வகுத்த துறவரம், சந்நியாசம் மூலம் தான் இறைவனை நெருங்க முடியும் எனக்கூறி திருமனம் முடித்த இறைத்தூதர்களை காமுகர்கள் எனக்கூறினீர்கள். உங்கள் ஜால்ட்ராக்களைக் கொண்டும் கூற வைத்தீர்கள், அத்தூதர்களுடைய இறைச்செய்தியை பொய் என உங்கள் முன் நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்த அப்பாவி மக்களை நம்பச்செய்தீர்கள், காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர் கேவலமான காமுகன் பேசுவது போல் சில தகாத வார்த்தைகளைச் சொல்லி என்னைப் பற்றியும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆத்திரமும், அதிர்ச்சியும் என்னை நடுக்க பதறி எழுந்தேன். ச்சீ, நீ ஒரு மனுஷனா, என்று கத்தினேன். அனுராதா ரமனன்.

இதன் பிரகாரம் துறவரமும், சந்நியாசமும் சுத்த பம்மாத்து தான் என்பதை நிரூபித்தீர்கள். இதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்கல்ல பிரேமானந்தா (போலி) சாமியார் வரிசையில், சதுர்வேதி (போலி) சாமியாருக்கடுத்து, குஜராத்தில் பிரபல நாராயண் கோயில் வல்லபந்த், தேவ்பந்த் ஆகிய இரு சாமியார்கள் ஒரே நேரத்தில் ரூபல் என்கிற இளம் பக்தையுடன் சல்லாப செய்தி நிர்வாண புகைப்படங்களுடன் கிடைக்கப்பெற்று அதிர்ந்தேன். இவைகள் பார்வைக்கு வரப்பட்டவைகள். இன்னும் பார்வைக்கு வராத பல்லாயிரம் சாமியார்களின் சல்லாபம் ஏராளம் !!! ஏராளம். இவைகளுக்கு ஒரே வடிகால் நபிகளார் கூறுகிற பார்வையை தாழ்த்தக்கூடிய, வெடகத்தலத்தை பாதுகாக்கக்கூடிய திருமணம் தான்.

உங்களுடைய மறுபிறவி தத்துவமும் போலியானது தான். உதாரணத்திற்கு இந்த ஜென்மத்துக் குற்றவாளியை அடுத்த ஜென்மத்தில் செக்கிழுக்கும் மாடாக படைக்கப்படுகிறார் என்று உங்கள் கூற்றுப்படி வைத்துக்கொள்வோம். அவன் கடந்த ஜென்மத்தில் கொலைகாரனாகவும், விபச்சாரம் புரியும் காமுகனாகவும் செயல்பட்டதுக்காகத் தான் இந்த ஜென்மத்தில் மாடாக படைக்கப்பட்டு செக்கிழுக்க விடப் பட்டார் என்றால் ? இதை எப்படி அந்த மாடு உணரும். இந்த ஜென்மத்தில் கடந்த ஜென்மத்து அவதார நிகழ்வுகள் உணர்த்தப்படுமா? உணர்த்தப்படாத வரை தண்டனையை எப்படி இன்னதுக்குத்தான் என ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள முடியும். ? ? ?.


இஸ்லாத்தில் மறுமை என்கிற ( மறு வாழ்வு )
உறக்கத்திலிருந்து எழுந்த பின் உறக்கத்திற்கு முன்பிருந்த நிலை எப்படி நினைவுக்கு சட்டென வந்து விடுமோ அது போன்றே மரணத்திற்கு முன்பிருந்த நிலையும் மறுமையில் எழுப்பப் படும்போது நினைவுக்கு வந்து விடும் .

89:23. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் உணர்வான். இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?

குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுப்பார்களானால் அவர்களுடைய வாய்களுக்கு முத்திரைக் குத்தப்பட்டு அவர்களுடைய கைகளையும், கால்களையும் இறைவன் சாட்சி சொல்ல வைப்பான். கைகள் கூறும் சங்கரராமனை கொலை செய்ய என்மூலம் தான் சங்கர மடத்து காணிக்கைப் பணத்தை சங்கராச்சாரியார் கொடுக்கச்செய்தார் எனக்கூறும். அதன் பின்

அல்லாஹ் கூறுகிறான்: அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். அல்குர்ஆன்: 36:65

மறுபிறவி என்கிற தத்துவமும், துறவரம் வரிசையில் ஒருக்காலும் மனிதனைப் பக்குவப்படுத்தாது, பக்குவப்படுத்தி இருந்தால் அதன் ஸ்தாபகர்களாகிய சாமியார்கள் நீங்கள் முதலில் பக்குவப்பட்டிருப்பீர்கள், நீங்கள் பக்குவப்பாடாததன் மூலமாக துறவரம், மறுபிறவி என்பதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய் தான். இஸ்லாமிய மறுவாழ்வு என்பதே மனிதனைப் பக்குவப்படுத்தும்.

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். 78:21,22,23

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் ''எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான். 69: 25, 26, 27, 28, 29.

ஆகையால் ஏகஇறைவன் அல்லாஹ்விடம் தவ்பா ( பாவமன்னிப்பு) கோரி இஸ்லாத்திற்குள் நுழைந்து கொள்ளுங்கள. தவ்பா செய்து முஸ்லிமாகி விட்டால் அல்லாஹ் மன்னித்து விடுவான் நரகம் இல்லை. இதே நிலையில் நீங்கள் மரணித்தால் மேற்கூறப்பட்ட நரகவேதனை கன்டிப்பாக உண்டு ''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! ''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!'' என நரகத்தில் அரற்றுவீர்கள்.


இக்கட்டுரை உங்களின் இந்த இக்கட்டமான நேரத்தை சாதகமாகப் பயன் படுத்தி ஏளனம் கூற எழுத வில்லை மாறாக உங்களுடைய இந்த இக்கட்டான நிலையில் மற்றவர்களை விட நாம் உங்களுக்கு நல்வழிக்கான நல்லுபதேசம் கூறி எழுதுகின்றோம். உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும், அனைத்து ஜீவராசிகளுக்கும் ஓரிறைவனாகிய அல்லாஹ்வே கடவுள், இதை உங்களுடைய வேதங்களும் பறைசாட்டுகின்றது


ரிக் வேதம் கூறுகிறது.
மானோ ஹிம்ஸூ ஜ்ஜ நிதாயஹ் ப்ருதிவ்யா, யோ வா திவம் சத்ய தர்மா ஜஜானஇ யஷ்சா பஷ்சந்தரா ப்ருஹதீர் ஜஜான, கஸ்மை தேவாய ஹவிஷா விதமே ரிக் வேதம் 10:121:9

பொருள்:
எவர் பூமியை உண்டாக்கினாரோ, அதுபோல் உண்மையை நியாயமாக்கி வைத்துக் கொண்டிருக்கும் எவர் தெய்வாமிர்தத்தை உண்டாக்கினாரோ, எவர் நீரும் பெரிய பிரகாசத்தையும் உண்டாக்கினாரோ, அந்த படைப்பாளனே நம்மை பரிபாலிக்கின்றான். அப்படிப்பட்ட தான்தோன்றியான பரமாத்மாவை ( ஓரிறையை ) நாங்கள் பக்தியோடு வணங்குகின்றோம்.


கிம் ஸ்விதா ஸீததிஷடான, சாரம்பணங்கதமல்ஸ்வில் கதாஸீல்,யதோ பூமி ஞ்ஞஜனயன் விஸ்வகர்மா வித்யா மௌர்ஸ்ணோன்ம ஹினா விஷவசக்ஷாஹ் ரிக் வேதம் 10:81:2

பொருள்:
அடிப்படை எதுவாயிருந்தது? ஆகாய பூமியின் காரணம் எதுவாயிருந்தது? தோற்றம் நடந்தது எப்படியாயிருந்தது? சர்வமும் காணக்கூடியவனாகிய விஸ்வகர்மாவே( ஓரிறையே ) சுய மகத்துவம் கொண்டு பூமியையும் ஆகாயத்தையும் படைத்து பரிபாலிக்கின்றார்.

ஸ்வேதாஸதரோ உபநிஷத் கூறுகிறது:
ஏகோ ஜாலவா னீஷத ஈஷநீபிஹ, ஸர்வான் லோகா னீஷத ஈஷாநீபிஹ,ய ஏ வைக உத்பவே ஸம்பவேச, ய ஏக திவிதுர ருதாஸ்தே பவன்தி' ஸ்வேதாஸதரோ உபநிஷத் (3:1)

பொருள்:
ஏகனாகிய பரமாத்மாவே! இந்த பிரபஞ்சத்தை படைத்துத் தன்னுடைய மேலான கட்டளைகளைக் கொண்டு ஆட்சி செய்யவும் செய்கின்றான். இந்த உலகமும் இந்த பிரபஞ்சமும் அவனுடைய கட்டளைக்குக் கீழ்படிந்ததாகும். ஏகனாகவே இருந்து, இந்த எல்லா உலகங்களுடைய துவக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாயிருக்கிற அந்த பிரம்மத்தை அதற்கேயுரிய தன்மையில் அறியும் மஹா புருஷர்கள் அமரர்களாவார்கள்.

நா தஸ்ய கார்யம் கரனம் ச வித்யதே, நா தஸ்ய ஸமஸ்சா யதிகஸ் ச த்ருஸ்யதேஇபராஸ்ய ஷக்திர் விவிதைவ ஸ்ருயதே, ஸ்வா பாவிக ஜ்ஞான பல க்ரியா ச ஸ்வேதாஸதரோ உபநிஷத் (3:1)

பொருள்:
அந்த பரமாத்மாவிற்கு ஜீவிகளைப் போல சரீரமும் புலனுணர்வுகளும் இல்லை. அவனை விட பெரியவனோ அல்லது சமமானவரோ எவரும் இல்லை. அவனுடைய ஆற்றல் பலவிதத்தில் செயல்படுகின்றது. அவனுடைய ஞானமும் ஆற்றலும் அவனுக்கேயுரிய இயல்பாகும்.

பகவத் கீதை கூறுகிறது.
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய, த்வமஸ்ய பூஜ்யச்ச குருர்- கரீயான், நத்வத்ஸமோ ஸ்த யப்யதிக குதோஸன்யோ, லோகத்ர யேஸப்யப்ரதிம - ப்ரபாவ கீதை 11:43

பொருள்:
ஒப்புயர்வில்லாத பெருமை வாய்ந்தவனே! நீ இந்த அசைவதும் அசையாததுமாகிய உலகிற்கு தகப்பனும் பூஜித்ததற்குரியவனும் பெரியவருக்குப் பெரியவனும் ஆகின்றாய், மூவுலகிலும் உனக்குச் சமமானவர் இல்லை. இன்னும் மேலானவர் வேறொருவர் எங்ஙனம்?.

ஏக இறைவன் என்பதன் அர்த்தம் ஒரு கடவுள் தான் என்பதும் ஊர்ஜிதமாகி விட்டமையால் ஏக இறை வணக்கம் இஸ்லாமியர்களால் மட்டுமே உலகில் நடத்தப் படுவதால் இஸ்லாமே உங்களுடைய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். அன்புடன் அழைக்கின்றோம் இறுதியாக கோயில் நிர்வாகத்தினர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !


அண்ணல் நபியவர்கள் மரணிப்பதற்கு ஒருநாள் முன்பு
அந்த இரவு நபிகளாரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னுடைய விளக்கை அனுப்பி, ஒரு பெண்ணிடமிருந்து எண்ணெய்யை வாங்கி விளக்கை ஏற்றினார்கள். நபியவர்களார் ஒரு யூதனிடம் தன்னுடைய கவச ஆடையை 30 ஸாஉ கோதுமைக்கு அடமானம் வைத்திருந்தார்கள்.நூல்: புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரேபிய தீபகற்பத்தின் செல்வ சீமாட்டியின் கணவர் ஆவார்கள். இறைச்செய்தி வர ஆரம்பித்ததும் அவர்கள் முதலில் செய்த வேலை. தங்களிடமிருந்த சொத்துக்களை ஏழைகளுக்கு தானதர்ம வழிகளில் செலவு செய்து தங்களை முழு ஏழையாக்கிக் கொண்டார்கள். அதன் பிறகு பாரசீக, ரோமானியப் பேரரசுகள் அவர்களிடம் தோற்று அதன் முழுவளமும் அவர்களின் காலடியில் மண்டியிட்டன.ஆனாலும் அரசு கருவூலத்திலிருந்து தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் ஒரு பேரீச்சம் பழத்தையேனும் எடுத்துக்கொள்வதில்லை எனும் முடிவுக்கு வந்தார்கள்.

மதீனத்து இஸ்லாமிய பேரரசு தன்னிறைவடைந்த நிலையில் மதீனத்து முஸ்லீம்கள் ஓரளவு வறுமையிலிருந்து விடுபட்டு, செல்வச்செருக்குடன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் ஆன்மீகத் தலைவராகவும், அரசியவல் ஆட்சி தலைவாராகவும் இருபெரும் பொறுப்புக்களுடன் உலகத்தைக் கோலோச்சிய மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரனிக்கும் தருவாயில் . ஒரு யூதரிடம் அடமானம் வைத்த தனது கவச உடையை மீட்ட முடியாமல் மரணிக்கிறார்கள். அன்றைய தினம் அவர்கள் மனைவி தங்கள் வீட்டு விளக்குக்கு அடுத்த வீட்டில் எண்ணெய் வாங்கி விளக்கேற்றுகிறார்கள். இது நபிகள் நாயகத்தின் ஒரு நாள் வறுமை வாழ்வு மட்டுமே ! முழு வறுமை வாழ்வையும் படித்தீர்களேயானால் உள்ளம் உருகி கண்கள் கண்ணீரை தாரை தாரையாகக் கொட்டும் .

ஆன்மீகத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட சங்கர மடத்துக்கு கோடிக் கணக்கில் சொத்து எதற்கு? மேல்படி சொத்துக்களால் தானே கொலையும் குடில் அபிஷேகமும் உருவானது .

 
இன்று சுதந்திர இந்தியாவின் ஏழை குடி மக்கள் தமிழ்நாட்டின் பெருநகரங்களின் சாலை ஓரங்களில் பிச்சை எடுத்து உண்பவர்களாகவும், உடுத்த உடை இல்லாதவர்களாகவும், வசிக்க வீடில்லாதவர்களாகவும் நாடோடிகளாகத் திறிவதைக் காண்கிறோம். சங்கரமடத்து கோடிக் கணக்கான சொத்துக்களைப் பிரித்து ஏழைகளுக்கு தர்மம் செய்யுங்கள்.

கோயிலும் ஒரு தின்னையும் மட்டும் தான் கோயில் சொத்து எனும் நிலை வந்தால் சாமியார்கள் மூலம் நிகழ்த்தும் மேல்படி கொலையும், குடில் அபிஷேகமும் நின்று விடும்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்