வியாழன், செப்டம்பர் 15, 2011

.

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .


وَلاَ تَقْرَبُواْ الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاء سَبِيلاً

17: 32. விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.



குஷ்பு ???

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். . .

இஸ்லாம் பெண்ணுரிமைப் பேனுவதில்லை அவர்களை பர்தா என்கிற காட்டுமிராண்டி சட்டத்திற்குள் முடக்கி வைத்திருக்கிறது எதை நாம் மறைக்கிறோமோ அதைப் பார்ப்பதில் தான் பிறருக்கு ஆர்வம் தோன்றும் அதனால் அதை திறந்து விட்டால் அந்த வேகம் குறைந்து விடும் என்றெல்லாம் கேள்வி தொடுப்போருக்கு இஸ்லாமிய  மார்க்கத்தில் பிறந்து வளர்ந்து இஸ்லாம் கூறும் பர்தா சட்டத்தை உடைத்துக் கொண்டு அல்லது அதைப் பேனாது வெளியேறிய குஷ்பு ஒரு உதாரணமாகும்.


திமணத்திற்கு முன்பு கண்டவர்களுடனும் கள்ள உறவில் ஈடுபடலாம், எயிட்ஸ் வராமல் பார்த்துக் கொண்டால் போதும் என்கிற புரட்சி கரமானக் ? கருத்தைக் கூறினார், இக்கருத்தை சில அதிமேதாவிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் கூட ஆதரித்து அறிக்கைகள் விட்டார்கள், பல நற்சிந்தனை வாதிகள் எதிர்க்கவும் செய்தார்கள். 

இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த குஷ்புவை அவரது பெற்றோர் இஸ்லாம் கூறும் பர்தா சட்டத்தின் வார்ப்பில் வார்த்து எடுத்திருந்திருப்பார்களேயானால் பேனிப் பகாதுகாக்க வேண்டிய கற்பை கண்டவன் நின்டவனுக்கும் பகிர்ந்து பங்கீடு செய்யலாம் என்றுக் கூற முன் வந்திருக்க மாட்டார், பிற சகோதரிகளுக்கும் இத் தீமையை அறிமுகப்படுத்தி அதில் ஆர்வமூட்டியிருக்கமாட்டார்.

யாம் பெற்ற இன்பம் வையகம் யாவினிலும் என்பது நல்லோரின் கருத்து, யாமடைந்த தீமை க(ள)லவு வையகம் யாவுக்கும் என்பது தீயோரின் கருத்து, தான் விழுந்த பாதாளத்தில் பிறரையும் வீழ்த்தி மகிழ்வதில் சில சேடிஸ்டுகள் மும்முறமாக செயல்படுவார்கள், அந்த வகையில் குஷ்பு ஒரு சேடிஸ்டாகும். சரி சேடிஸ்டுகளோடு அது ஒரு சேடிஸ்டாக இருந்து கொள்ளட்டும் அவர்களுடைய கூற்றுக்களை ஆதரித்து அறிக்கைகள் விட்டவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?


இறைவனால் அனுப்பப் பட்ட எந்த வேதமும் விபச்சாரத்தை அனுமதிக்க வில்லை அனைத்து வேத கிரந்தங்களுமே விபச்சாரத்தை தடுக்கிறது. (வேதம் பெறாதவர்களில் பல நற்சிந்தனைவாதிகளும் விபச்சாரத்திலிருந்து பரவும் கொடிய நோயின் தாக்கமறிந்ததால் எதிர்ப்பர்.).


ஹிந்து மத வேதங்கள் சிதைக்கப் பட்டதாலும், அது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வளையத்திற்குள் முடங்கி விட்டதாலும், ஹிந்து மதத்தின் மற்றப் பிரிவினர்கள் திருவள்ளுவர், பெரியார் போன்றோருடைய கருத்துக்களை வேத வாக்காக எடுத்துக் கொண்டார்கள். அவ்வப்பொழுது திருக்குறளுக்கு கருனாநிதி ஒரு கருத்தும் கன்னதாசன் ஒருக்கருத்தும் தெரிவிப்பார் எவரதுக் கருத்து ஓங்கி நிற்குமோ அது தான் இறுதியில் உண்மை வடிவம் பெறும் (காரணம் பாமரர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் நடையில் உள்ளத் தமிழ் அல்ல திருக்குறள் தமிழ்).


இன்று குர்ஆனைத் தவிர மற்ற அனைத்து வேதக் கிரந்தங்களும் மனிதக்கரங்களின் ஊடுருவலால் சிதைக்கப்பட்டு ஒவ்வொருவரும் தான்தோன்றித் தனமானக் கருத்துக்களை வெளியிடத் தொடங்கியதன் வெளிப்பாடே குஷ்புவடைய சமூக சீரழிவுப் பேச்சும், அதை ஆதரித்துக் கருத்துத் தெரிவிக்கும் முற்போக்கு வாதிகளுமே என்பதை விளங்கிக கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்னக் கூறுகிறது.

உலகப் பொதுமறை திருக்குர்ஆனின் நடை பாமரனும் புரியும் விதம் மிக எளிமையான நடையில் இருக்கும் அதன் மூல மொழியிலிருந்து உலகில் உள்ள எந்த மொழிக்கு மாற்றம் செய்தாலும் படிப்பதற்கு மிக எளிதாகவே இருக்கும் ஆளாளுக்கு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இராது. எந்த ஒரு சமூகப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, தனது வாழ்வியல் பிரச்சனையாக இருந்தாலும் குர்ஆனைப் புறட்டினால் தெளிவான விடை கிடைக்கும்.

அல்லாஹ் ஒரு விஷயத்தை மனித சமுதாயத்திற்கு கடமையாக்கி வானவர் மூலம் தனது மெஸேஞ்சர் முஹம்மது நபிக்கு அனுப்புவான் அவர்கள் அந்த மெஸேஜை ரிஸிவ் செய்து மக்களுக்கு அறிவிப்பார்கள் அத்துடன் அவர்களுடைய பணி முடிந்ததா என்றால் இல்லை, அவ்விஷயத்தை முதலில் தங்களுடைய வாழ்க்கையிலும், தங்களுடைய உறவினர்கள் தொடங்கி தங்களது தோழர்கள் வரை அதை நடைமுறைப் படுத்தி சமுதாயத்தில் புழக்கத்தில் விட்டு அந்த இறைவசனத்திற்கு உயிர் ஊட்டுவார்கள், அத்துடன் வாழையடி வாழையாக ஒவ்வொரு தலைமுறையினரும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அவைகளை மக்களிடம் அறிவிக்கச் சொன்னார்கள்.

அல்லாஹ்விடமிருந்து வந்த இறைச்செய்தி ஒன்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தி தனது சமுதாய வழித் தோன்றல்களுக்கு கடமையாக்கினார்கள் என்பதை கான்போம்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. மேலும் அது (மனித குலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழி மிகக் கெட்டதாகும் அல்குர்ஆன்: 17- 32.


அண்ணலார் கூறுகிறார்கள்
''யார் தனது இரு தாடைகளுக்கிடையிலுள்ள ஒன்றை (நாவை)யும், தன் கால்களுக்கிடையிலுள்ள ஒன்றை (மறை உறுப்பை)யும் பாதுகாப்பதற்காக பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சுவனம் கிடைப்பதற்காக நான் பொறுப்பேற்கின்றேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஸஹ்லுப்னு ஸஃது நூல்: புகாரீ.6474


வாழ்நாள் முழுவதையும் தியானத்தில் கழிப்பவருக்கும் லட்சம், லட்சமாகவும் கோடி கோடியாகவும் தர்மம் வழங்குபவருக்கும் கூட கிடைக்காத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிபாரிசு உலகில் விபச்சாரம் செய்யாமல் கற்பை பேணிக் காத்து பரிசுத்தத் தன்மையுடன் வாழ்ந்தவருக்கு அவருடைய மற்ற விஷயங்களுக்காக மறுமையில் அல்லாஹ்விடம் பறிந்துரைப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விபச்சாரத்தை ஆரம்பத்திலேயே வேரோடும், வேரடி மண்னோடும் பிடுங்கி எரிந்து விட்டார்கள்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில் தனது மருமகனார் அலி (ரலி) அவர்களுடன் நடந்து செல்லும் பொழுது அவர்களது எதிரில் ஒரு அழகான பெண் வருகிறார் அப்பெண்ணை அலி (ரலி) அவர்கள் பார்த்து விடுகிறார்கள், ஓறிரு எட்டுகள் எடுத்து வைத்தப் பின் அப்பெண்ணை மீண்டும் பார்க்க எண்ணம் தோன்றுகிறது திரும்புகிறார்கள் கண்ணிய நபியவர்கள் அவர்களுடைய புஜத்தில் கை வைத்து திருப்பி விட்டு ''அலியே! ஒரு முறை (யதார்த்தமாக) முதல் பார்வை பார்க்க உமக்கு அனுமதியுண்டு; இரண்டாம் முறை நீர் பார்ப்பது கூடாது'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைது இப்னுல் ஹுஸைப் (ரலி) ஆதாரநூல்: அபூதா¥து.
 
ஒரு பார்வை பெண்களின் மீது பட்டுவிடுவதை குறை காணமுடியாது, அது யதார்த்தம், அதேப்பார்வையை மீண்டும் அப்பெண்ணின் பக்கம் திருப்பிவிட்டால் அது விபச்சாரத்திற்கு கண்டிப்பாக வழித்தடம் அமைத்துவிடும் காரணம் இரண்டாவது முறைப் பார்க்கும்போது அப்பெண்ணிடமிருந்து எதிர்ப்பு வரவில்லையெனில், பின் தொடர ஆர்வம் ஏற்படும், பின் தொடரும் போதும் எதிர்ப்பு வரவில்லையெனில் அன்றே அவன் விபச்சாரத்தில் வீழ்ந்து விட வில்லையென்றாலும் தாமதித்தேனும் போய் வீழ்வான். அதனால் பெண்ணின் மீது செலுத்தும் இரண்டாவது பார்வையை அன்றே தனது உறவுக் காரரான அலி (ரலி) அவர்களிலிருந்து தடை செய்கிறார்கள்.

மேலும் கண்ணிய நபியவர்கள் தனது தோழர்களிடம் கீழ்கானுமாறு கூறினார்கள் ''திருமண உறவு (மனைவி) தவிர உங்களில் யாரும் வேறு பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் நூல்: முஸ்லிம். 4383


மனைவி தவிர மற்ற உறவுப் பெண்களுடனோ, அல்லது அன்னியப் பெண்களுடனோ தனித்திருக்கக் கூடாதென்றும் வற்புருத்திக் கூறினார்கள். காரணம் உறவு முறைகளை சொல்லிக் கொண்டு தான் முதலில் பழகுவார்கள் ஆரம்பத்தில் இருவருமே தங்களை யோக்கியர்களாக ஒருவர் மற்றவரிடம் காட்டிக் கொள்வதில் தீவிரமாக நடிப்பார்கள். அவர்களுடைய நடிப்பை அறிந்த ஷைத்தான் இதெல்லாம் ஒன்றுமில்லை படைக்கப்பட்டதன் நோக்கமே அனுபவிக்கத் தான் என்பது போலவும், வியாதி வராமல் பார்த்துக் கொண்டால் போதும் என்பது போலவும் எடுத்துக் கூறி தனது பங்களிப்பை செலுத்தி அவர்களை அழிவில் இட்டுச் சென்று விடுவான் அத்துடன் அவன் பணி முடிந்து விடும் அதன் பிறகு அதில்போய் வீழ்ந்தவர்கள் தங்களுக்குத் துனையாக இன்னும் பலரையும் அழைத்துக் கொள்வார்கள்.

அதனால் பெருமானார் அவர்கள் ஆண், பெண் இருவருடைய தனிமையை ஆரம்பத்திலேயே தடை செய்து விடுகிறார்கள். ஒவ்வொரு தீமைகளையும் அது நுழையும் அதன் நுழைவு வாயில்களில் வைத்தே நசுக்கி விடுவார்கள்.


இவ்வாறாக மார்க்கம் விபச்சாரத்தை தடுத்திருப்பதுடன் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் அனைத்து வழிகளையும் தொடர்புகளையும் அடைத்து விடுகிறது. அதனால் தான் பெண்கள் பர்தா அணிய வேண்டும், ஆண்கள் அன்னியப் பெண்களுடன் தனித்திருக்க கூடாது என்று கட்டளையிட்டுள்ளது.

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே ! உங்களுடைய பிள்ளைகளை இஸ்லாம் கூறும் பர்தா சட்டத்தில் வளர்த்தெடுக்க முயற்சி செய்யுங்கள் குஷ்பு போன்றவர்கள் உருவாகமல் பாரத்துக் கொள்ளுங்கள்,

அன்புள்ள சகோதரர் மார்க்ஸ் அவர்களே !
உங்களுடைய பல ஆக்கங்களை நான் படித்தவன் என்கிற முறையில் உங்களை ஓர் நல்ல சிந்தனைவாதி என்ற முறையிலும், தங்களுடைய குஸ்பு ஆதரவுக் கருத்தின் மீது சிறிய ஓர் விமர்சனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

மனிதகுலத்தை அழிவின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும் மாபெரும் தீமையை இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத பெரியோர் முதல், சிறியோர் வரை விட்டு வைக்காத உயிர்கொல்லி நோயை (எயிட்ஸை) உருவாக்கும் விபச்சாரத்தை ஆதரிக்கும் நடிகையின் நச்சுக்கருத்தை, ஆதரித்து அறிக்கை விட்டது உங்கள் வாசகராகிய எம்போன்றவர்களுக்கு ஒரு மாதிரியான நெளிசலை ஏற்படுத்திற்று, கருத்து சுதந்திரம் என்கிற பேரில் அடுத்தவனின் உரிமையின் மீது, ஒழுக்கத்தின் மீது, கண்ணியத்தின் மீது கைவைக்கக் கூடாது, சுதந்திர இந்தியாவில் அவரவர் தங்களது நல்லக் கருத்துக்களை பறிமாரிக் கொள்ளலாம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் நாசமாக்கும், இழிவுபடுத்தும் நச்சுக்கருத்துக்களை பரிமாறக்கூடாது, ஊடகங்களும் முன்னுரிமை வழங்கக் கூடாது என்பதை; புரிந்து கொள்ள வேண்டும் ஒரு தீமையை தான் நேரடியாக செய்வதை விட வேறொருவன் அதை செய்வதற்கு மறைமுகமாகவும், அல்லது வெளிப்பாடையாகவும் தூண்டுவது, ஆதரவளிப்பது மாபெரும் தீமையாகும்.

'
ஹலாலும் (அனுமதிக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஹராமும் (தடுக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஆனால் இவ்விரண்டுக்குமிடையே சந்தேகத்திற்குரிய சில விஷயங்கள் உள்ளன. சந்தேகத்துக்குரிய பாவங்களிலிருந்து விலகி இருப்பவன் பகிரங்கமான பாவங்களிலிருந்தும் கண்டிப்பாக விலகியே இருப்பான். சந்தேகத்திற்குரிய பாவங்களில் துணிவுடன் ஈடுபடுபவன் வெளிப்படையான பாவங்களில் வீழ்ந்துவிட பெரிதும் வாய்ப்புண்டு. பாவங்கள் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட பகுதிகளாகும் (அவற்றினுள் நுழைந்திட அனுமதியில்லை, அதனுள் அத்துமீறி நுழைந்துவிடுவது குற்றமாகும்.) தடை செய்யப்பட்ட பகுதியின் அருகே மேய்கின்ற பிராணி அதனுள் புகுந்துவிட பெரிதும் வாய்ப்புண்டு.' (புகாரி, முஸ்லிம்) அறிவிப்பாளர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


மேற்கானும் நபிகளாரின் பொண்மொழிக் கூறுவதின் சுருக்கம் நல்வழி எது ? தீயவழி எது ? என்று ஓரளவு தனது பகுத்தறிவு கிரஹித்துக் கொள்ளும், அதன் மூலம் நல்வழிகளுக்குள் தன்னை தாமதமின்றி நுழைத்துக் கொள்ளவும், தீயவழியின் பக்கம் அறவே தங்களை செலுத்திடாமல் இருக்கவும் கூறுகிறது. சில பாவகாரியங்களின் மீது சந்தேகம் ஏற்படலாம் அவ்வாறு சந்தேகம் வரும் ஒரு விஷயத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும் அவ்வாறு நடந்து கொண்டால் , அப்பயிற்சி சந்தேகமற்ற பெரும்பாவத்தில் வீழ்ந்து விடாமல் தன்னை தடுத்துக் கொள்ளும் என்பதாகும்.


இஸ்லாமிய மதத்தில் பிறந்த குஷ்புவை அவரது பெற்றோர் இஸ்லாம் கூறும் பர்தா சட்டத்தின் வார்ப்பில் வார்த்து ( வளர்த்து ) எடுத்திருந்திருப்பார்களேயானால் பேனிப் பகாதுகாக்க வேண்டிய கற்பை கண்டவன் நின்டவனுக்கும் பகிர்ந்து பங்கீடு செய்யலாம் என்ற நச்சுக் கருத்தைக் கூற முன் வந்திருக்கமாட்டார், பேனிப் பகாதுகாக்க வேண்டிய கற்பை கண்டவன் நின்டவனுக்கும் பகிர்ந்து பங்கீடு செய்ய முன் வந்திருக்க மாட்டார், பிற சகோதரிகளுக்கும் ஆர்வமூட்டியிருக்கமாட்டார் ஆர்வமூட்டும் சினிமாத் துறையை தொழிலுக்கு தேரந்தெடுத்திருக்க மாட்டார்.
 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்