செவ்வாய், அக்டோபர் 25, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.



எங்கே சென்றது பாரம்பரியமிக்க தமிழர் பண்பாடு ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எங்கே சென்றது பிறன் மனைவியை தன் சகோதரியாய் பார்த்த பாரம்பரியமிக்க தமிழர் பண்பாடு ?

சென்னை, பெங்களு}ர், மும்பை போன்ற தொழில் நகரங்களில் பணிபுரியும் பொறியாளர்கள், மருத்துவர்கள் விடுமுறை நாட்களிலும் கூட சொந்த ஊர் செல்ல முடியாத அளவுக்கு எந்த நேரமும் பிஸியாக இருப்பார்கள். பாக்கெட் நிறைய பணத்தையும், மணிப்பர்ஸ் நிறைய கிரெடிட் கார்டுகளையும் அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் அவர்களிடம் சில இளம்பெண்கனின் புகைப்படங்களை காட்டி குறிப்பிட்ட நாட்களுக்கு பெருந்தொகையை பேரம் பேசி அப்பெண்களின் கழுத்தில் தாலியைக் கட்டி வாடகை மனைவியாக அவர்களிடம் குடும்பம் நடத்த விடுகின்றனர் விபச்சார புரோக்கர்கள்.

காரணம் லாட்ஜ்களில், பீச்சுகளில் மாட்டிக் கொண்டால் இவர்களின் படிப்புக்கும், பதவிக்கும் பங்கம் ஏற்படும் என்பதால் கழுத்தில் தாலியுடன் வலம் வந்தால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்களாம்.

இவர்கள் வெளியில் நடந்து சென்றால் ஒரிஜினல் கணவன், மனைவி தோற்றுவிடும் அளவுக்கு இவர்களது பாவனைகள் இருக்கும் என்றும் இவர்கள் தங்களின் பொழுதை கழிப்பதற்கு அதிகமாக ஊட்டி, கொடைக்கானலை தேர்வு செய்கின்றனர் என்றும் இந்த நூதன விபச்சாரத்தை கண்டு பிடித்து அறிவித்தது டூரிஸ்ட் கெய்டுகள் தான் என்றும் ஒரு பார்ப்பன பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் ஒருவனுக்கு ஒருத்தி என்றும், பிறன் மனைவியை தன் சகோதரியாய் பார்த்த தமிழர் பண்பாடு  மாறி விட்டது என்றும் அழுது புலம்பி இருந்தது அவ்வாறு அழுத கண்களின் ஈரம் காய்வற்குள் ஈரானில் விபச்சாரம் செய்த பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது காட்டுமிரான்டித்தனம் என்ற கூக்குரலையும் சேர்த்தே அடுத்த நாள் பிரசுரத்தில் எழுப்பி இருந்தது.   

என்ன இவர்களின் நிலைப்பாடு என்று அவர்களுக்கும் புரிவதில்லை அவர்களின் பத்திரிகைகளை வாசிப்பவர்களுக்கும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

கல்லெறி தண்டனையை காட்டுமிராண்டி சட்டம் என்றுக்கூறி விபச்சாரத்தை ஃப்ரீ பண்ணிய மேற்கத்திய கலாச்சாரத்திற்கு வழிதிறந்து விட்டு எயிட்ஸ் எனும் உயிர் கொல்லி நோயை பாரம்பரியப் பண்பாடு மிக்க தமிழர்களுக்குப் பரிசாக பெற்றுக் கொடுத்ததை மறந்துவிட்டு, அல்லது மறைத்துக்கொண்டு விபச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கல்லெறி தண்டனையை இஸ்லாமிய சட்டம் என்பதால் அதைக் காட்டுமிராண்டி சட்டம் என்றுக்கூறி புழங்காகிதம் அடைகின்றனர்.

தனக்கு உரிமை இல்லாதவளை அனுபவிப்பதை நாகரீக கலாச்சாரம் போல் மேற்கத்தியர்களால் பரப்பப்பட்டக் காரணத்தால் கலாச்சாரப் பாரம்பரியமிக்க இந்தியாவில் ஒளிந்து, மறைந்து நடந்த இந்த ஈனச்செயல் இன்று இது ஒரு மேட்டரே இல்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிக்கைக்கு சிறையிலிருந்து கொண்டு டாக்டர் பிரகாஷ் அளித்தப் பேட்டியில் அன்று நான் செய்தது பெரிய மேட்டராக கருதி ஏராளமான செக்ஷன்களில் வழக்குப் பதிந்து வெளியில் வரமுடியாத அளவுக்கு என்னை சிறையில் தள்ளினார்கள் இன்று அதையே சாமியார்கள் முதல் சாமானியர்கள் வரை செய்யத் தொடங்கியதால் அது சாதாரண மேட்டராக மாறி என் மீது பதியப்பட்ட ஏராளமான செக்ஷன்கள் தள்ளுபடி ஆகி வருகிறது அதனால் கூடியவிரைவில் குற்றமற்றவன் என்ற தீர்ப்பில் வெளியில் வருவேன் என்றுக் கூறி இருக்கிறார். 

அவர் கூறியதை இன்னும் உண்மைப்படுத்தும் விதமாக சமீபத்தில் திருமனத்திற்கு முன்பு விரும்பியவர்களிடம் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றுக்கூறிய சினிமா நடிகையின் நச்சுக் கருத்தை ஆதரித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் அளவுக்கு குப்பை மேட்டராகி விட்டதால் மெரீனா கடற்கரை பட்டப்பகலிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அசிங்கங்கள் அறங்கேறி போலீஸாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. 

என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பிதுங்கிய போலீஸார் இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக செல்போனில் சில ஜோடிகளின் அத்து மீறலை படமெடுத்து இதை உங்கள் பெற்றோரிடம் காட்டிவிட்டு பத்திரிகைக்கு கொடுத்து பிரசுரிப்போம் என்று மிரட்டியதும் காலில் விழுந்து கதறி அழுது இனிமேல் இந்தப் பக்கமே வரமாட்டோம் என்றுக் கூறி ஓட்டம் பிடித்துள்ளனர்.

தனித்து வழங்கப்படும் எந்த தண்டனையையும் உடலாலும், மனதாலும் தாங்கிக் கொள்ளும் மனிதனால் பிறர் பார்க்க நிறைவேற்றப்படுவதை சகித்துக்கொள்ள முடியாமல் வெட்கி தலைகுணியும் நிலையில் உடலில் இயங்கும் செல்களை இறைவன் அமைத்திருப்பதால் தான் விபச்சாரம் செய்தவர்களை பொது இடத்தில் நிருத்தி பிறர் பார்க்க தண்டனையை நிறைவேற்றுங்கள் அவ்வாறு நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டுபவர்கள் பாவியாகி விடுவீர்கள் என்று ஆயிரத்தி நானூரு வருடங்களுக்கு இறைவன் தன் திருமறையில் கூறி எச்சரிக்கை செய்தான். 

எந்த நிலையிலும் ஒரு மனிதனால் இன்னொரு மனிதன் பாதிக்கப்படுவதை, இஸ்லாம் அனுமதிக்கவே இல்லை. எயிட்ஸ் கிருமி தாக்கிய ஒரு பணக்காரன் பணத்தை வாரி இரைத்து கூடுதல் சிகிச்சையை பெற்றுக்கெண்டு வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமூகத்தில் வாழ்கிறான். அதே எயிட்ஸ் கிருமி தாக்கிய ஒரு ஏழை அரசு மருத்;துவமனையில் இலவச சிகிச்சைப் பெறுவதால் அரசு மருத்துவரால்; எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அதனால் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்கிறான்.

விபச்சாரம் தீமை என்பதாலும் அதனால் பிறர் பாதிக்கப்படுவதாலும் அந்த தீமையைப் பரவ விடாமல் தடுப்பதற்காக தண்டனையை கடுமையாக்கியது இஸ்லாம். அதனால் பாரம்பரியம், பாரம்பரியமாய் பேணி வந்த இஸ்லாமிய கலாச்சாரமும் மாறவில்லை, அதை நடைமுறைப் படுத்திய நாடுகளில் எயிட்ஸ் நோயும் பரவ வில்லை.

விபச்சாரம் செய்தவர்களில் நான்கு ஜோடிகளைப் பிடித்து சென்னையில் ஒன்று, மதுரையில் ஒன்று, திருச்சியில் ஒன்று, கோவையில் ஒன்று பொதுமக்கள் முன்னிலையில் நிருத்தி அரசு கல்லெறி தண்டனையை வழங்கினால் அதன் பின் மாறிப்போன பிறன் மனைவியை தன் சகோதரியாய் பார்த்த தமிழர் பண்பாட்டை வெகுவிரைவில் மீட்டெடுத்து நிலை நிருத்த முடியும். இல்லை என்றால் இனி ஒரு காலத்திலும் பிறன் மனைவியை தன் சகோதரியாய் பார்த்த தமிழர் பண்பாடு மரபுமிக்க தமிழர் கலாச்சார வரலாற்றுப் பெண்ணேடுகளிலிருந்தே அழிக்கப்பட்டுவிடும்.

பாரம்பரியம், பாரம்பரியமாய் காத்து வந்த தமிழர் பண்பாடா ? இஸ்லாத்தை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற மனமுரண்டா ? சிந்தித்தால் சீர் பெறலாம் !

உணர்வுக்கு எழுதியக் கட்டுரை


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

வியாழன், செப்டம்பர் 15, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடியபோது தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக உசாமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பரிந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள், உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். அதனால் தான் அவர்கள் அழிந்து போயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என் புதல்வி ஃபாத்திமாவே இந்தக் குற்றத்தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று இறைத்துதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்தார். ஆதார நூல்: புகாரி 6787


அர்ச்சகர் தேவநாதனின் லீலைகள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



செல்வாக்கு மிக்கவர்கள் துணிந்து குற்றச்செயல்களில ஈடுபடுவதும்; அதில் மாட்டிக் கொண்டால் தண்டனையிலிருந்து தப்பித்து கொள்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு மிகவும் நெருக்கமான திண்ணைத் தோழர், பள்ளித் தோழர், நெருங்கிய உறவினர் யாரென்று வலைவீசித் தேடி அவர் மூலமாக சிபாரிசு அனுப்பி முடிந்தளவு தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயற்சி செய்கின்றனர். ( ஊடகத்தின் கவனத்திற்கு சென்ற ஒன்றிரண்டு மட்டுமே விதிவிலக்கு ). 

மேல்படி அதிகாரியும் தன்னை விட முக்கியமான ஒருவர் அல்லது தனக்கு நெருக்கமான உறவுக்காரர் ஒருவர் தன்னிடம் சிபாரிசுக்கு வந்து விட்டால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய கிரிமினலையும் கூட தண்டனையிலிருந்து தப்ப வைத்து விடுவார்.

பணம் கூட அடுத்த நிலை, சிபாரிசே முதல் நிலை எனும் அளவுக்கு அரசு அதிகாரிகளுடைய நிலை கீழானதாக மாறி ஸ்காட்லான்டு போலீஸூக்கு நிகரான நமது போலீஸின் இமேஜ் சரிந்து கொண்டிருக்கிறதைப் பார்க்கின்றோம்.
 
இது இன்று மட்டும் நடக்கும் சமாச்சாரமல்ல மாறாக அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றாகும் இந்த தீமையையும் அண்ணல் அவர்கள் ஆட்சி செய்த காலத்திலேயே துடைத்தெறிந்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் அரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் உயர்ந்த மக்ஸூம் குலத்தை சேர்ந்த பெண்மனி திருட்டில் ஈடுபட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்கு வந்தது.

தண்டனை வழங்கப்படவிருந்த அப்பெண் நல்லப் பாரம்பரியத்திலிருந்து வந்தவரும், உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவருமாவார்.

அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் அவரது பாரம்பரியமிக்க குடும்பத்தவர்ளும், அவரது உயரந்த குலத்தைச் சேர்நதவர்களும் கேவலப்பட்டு தலை குணியும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதால் முன்கூட்டியே மேல்படி தண்டனையியிலிருந்து விடுவிப்பதற்காக ஆட்சித் தலைவராகிய அண்ணல் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவரை தேடும் பணியில் அப்பெண்ணின் குலத்தைச் சேர்ந்த முக்கிமானவர்கள் ஈடுபட்டனர்.

அண்ணல் அவர்களிடம் வளர்ந்து அவர்களின் அன்பிற்கு பாத்திரமான உசாமாவே அதற்கு மிகவும் தகுதியானவர் எனும் முடிவுக்கு வந்தார்கள்.

உசாமா(ரலி) அவர்களை அணுகி குலப்பெருமையயை காப்பாற்றுவதற்காக அப்பெண்ணின் தண்டனையை ரத்து செய்ய அண்ணல் அவர்களிடம் பரிந்துரை செய்யும் படி கேட்டுக் கொண்டனர்.

இதற்கு இணக்கம் தெரிவித்த உசாமா(ரலி) அவர்கள் அண்ணல் அவர்களை அணுகி உயர்குலத்தைச் சேர்ந்த அப்பெண்ணின் தண்டனையை ரத்து செய்து விடும்படி கோரிக்கை வைத்ததும் இதை உசாமாவின் வாயிலிருந்து செவியுற்ற அண்ணல் அவர்கள் அவரின் மீது கடும் கோபம் கொண்டு உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் அழிந்து போனதற்கு இது தான் காரணம் என் மகள் இக் குற்றத்தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டிப்பேன் என்றுக்கூறி காலதாமதம் செய்யாமல் சிபாரிசு செய்த உசாமா முன்னிலையிலேயே குற்றவாளிக்குரிய தண்டனையை நிறைவேற்றி சிபாரிசை முளையிலேயே கிள்ளி எறிந்தார்கள்.

இதன் காரணத்தினால் அவர்கள் ஆட்சி செய்த காலத்திலும், அவர்கள் காட்டித் தந்த வழியில் ஆட்சி செய்த காலம் வரையிலும் எவரும் எவருக்காகவும் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி அல்லது ஆட்சியாளருக்கு நெருக்கமானவரை தேடிப்பிடித்து அதிகாரிகளை சந்தித்து சிபாரிசு செய்ய செல்லவுமில்லை.

குடும்ப கௌரவமும், குலப்பெருமையும் தன் ஒருவரின் ஈனச்செயலால் காற்றில் பறந்து விடும் என்றுக் கருதி எவரும் துணிந்து குற்றச் செயலில் ஈடுபடவும் முன் வரவில்லை.

அரபு நாடுகளுக்கு தங்களின் பின்ளைகளை வேலைக்கு அனுப்பும் பொழுது கீழே கிடக்கும் ஒருப் பொருளைக் கூட குணிந்து எடுத்து விடாதே கையை வெட்டி விடுவார்கள் என்ற உபதேசம் மறவாமல் செய்வார்கள் அந்தளவுக்கு உலகின் மூளை, முடுக்கு, பட்டி, தொட்டிகளிலெல்லாம் பிரபலமாகிப் போயிருந்தது அரபு நாட்டின் குற்றவியல் தண்டனை.

ஆட்சியாளர்கள் நம்முடைய ஆட்கள் என்ற தைரியத்தில் அரசியல் பிரமுகர்களின் செல்வாக்குப்பெற்ற ஜெயேந்திரர் அவர்கள் சில வருடங்களுக்கு முன் சங்கரமடத்தில் துணிந்து ஒருக் கொலையும் செய்து பெண் புரோக்கர்கள் மூலமாக விருப்பப்பட்ட பிரபல பெண்களை அழைத்து வந்து பெரும்பான்மை ஹிந்துக்களால் மதிக்கப்படுகின்ற சங்கர மடத்திற்குள் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டார்.

இன்று அவரது ஸ்டைலில் அதே காஞ்சிபுரத்தில் கோயில்  கருவறையில் வைத்துப் பல பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபடத் துணிந்தார் அர்ச்சகர் தேவநாதன். இதில் தான் மட்டும் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பல குடும்பப் பெண்களை வளைத்துப் போட்டு அவர்களை சில அரசியல் பிரமுகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார். ஜெயேந்திரருக்கு அன்றே அவரது குற்றத்திற்கு தகுந்தாற்போல் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இன்று தேவநாதன் அதே மாதிரியான வழியில் குற்றம் செய்ய பயந்திருப்பார்.

உயர் குலத்தைச் சேர்ந்தவர் ஜெயேந்திரர் என்பதால் ஒன்றிரண்டு முறை மட்டும் கண்துடைப்புக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து பிறகு விட்டு விட்டதால் அவரைப் போன்ற மதகுருமார்கள், மத போதகர்கள், அர்ச்சகர்கள் அவரது வழியில் அப்பாவி பக்தர்களையும், பக்தைகளும் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை மிஸ் யூஸ் பண்ணுகின்றனர்.

இதற்கு தீர்வு தான் என்ன ?

இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், (நபியே!) அல்லாஹ்வின் சட்டப்படி எங்களிடையே தீர்ப்பளியுங்கள் என்றார். அவரைவிட விளக்கமுடையவராயிருந்த மற்றவர், ஆம், இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள் என்று கூறினார். பின்னர் கிராமவாசியான முதல் நபர் என்னைப் பேச அனுமதியுங்கள் என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், பேசுங்கள் என்றார்கள். அவர், என் மகன் இதோ இவரிடம் கூலிக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் மக்கள் கூறினர். நான் இந்த தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக அதற்கு பதில் நூறு ஆடுகளையும், என்னுடைய அடிமைப் பெண்ணையும், பிணைத் தொகையையும் வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தனர் என்றார். 

இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் உயிர்  எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன் உம்முடைய ஆடுகளும், உம்முடைய அடிமைப் பெண்ணும், பிணைத்தொகையும் நீர் திரும்பப் பெற வேண்டும் என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு (திருமணமாகாததால்) நூறு கசையடிகள் வழங்கி, ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தினார்கள். அருகிலிருந்த உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்களிடம் அவனுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட மற்றொரு மனிதரின் மனைவியிடம் சென்று அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்! என்று கூறினார்கள். அவள் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதும் அவளுக்கு உனைஸ்(ரலி) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள். அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: நூல்: புகாரி 6842, 6843.

விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரில் ஒருவரை ரகசியமாக விசாரிப்பதும், மற்றொருவரை பகிரங்கமாக விசாரிப்பதும், ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதும், மற்றொருவரை ரகசியமாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதும்,

ஒருவரை அவருடைய பெயருடன் பத்திரிகைகளில் குறிப்பிடுவதும், இன்னொருவருடையப் பெயரை (மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) என்று மாற்றி எழுதுவதும் குற்றங்கள் செய்வதற்கு இன்னும் தூண்டுதலாக அமையும் என்பதை சிந்திக்க வேண்டும்.

விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரிடமும் சமமான அணுகுமுறையும், சமமான தண்டனையும் வழங்கப்படாதவரை குற்றங்களை குறைக்கவே முடியாது.

மதகுருமார்கள், மதபோதகர்கள் (ஹிந்து, கிருஸ்தவ, முஸ்லீம்) மீதான அளவு கடந்த மரியாதையை மக்கள் தவிர்க்க வேண்டும், சாதாரண மனிதர்களின் மீது வைக்கும் மரியாதையே அவர்கள் மீதும் செலுத்தப்பட வேண்டும்.

முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய நபிமார்களை பின்பற்றியவர்களை சீடர்கள், சிஷ்யர்கள் என்றும் அழைப்பட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின் பற்றியவர்களை மட்டுமே தோழர்கள் என்றழைக்கப்பட்டு மஹான்களும் மக்களும் சமமானவர்கள் இறைவன் மட்டுமே தனித்து விளங்குபவன் என்ற நிலைப்பாட்டை முஹம்மது (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்.

எனக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டாம் என்று தனி மரியாதையை தடை செய்தார்கள், மர்யமின் மகன் ஈஸாவை (ஏசுவை) அவர்களது சமுதாயம் அளவு கடந்து புகழ்ந்;ததைப் போன்று என்னைப் புகழ வேண்டாம் என்றும் தனி மனித துதிப் பாடுதலைப் தடை செய்தார்கள்.

இதனால் நபிகள் நாயகத்தின் மீது மக்களுக்கு பாசமும், அன்பும் ஏற்பட்டது பக்தி ஏற்படவில்லை. அதனால் மதகுருமார்களிடம் முஸ்லிம்கள் அதிகம் ஏமாறுவதில்லை (ஏமாறுபவர்கள் நபிகள் நாயகத்தின் வரலாறு தெரியாதவர்கள் ஒன்றிரண்டுப் பேர் இருக்கலாம். )

மதகுருமார்கள், மற்றும் மதபோதகர்கள் மக்களிடத்தில் தங்களை தனிப்பட்ட முறையில் காட்டிக் கொள்வதற்காக அணியும் விஷேச யூனிஃபாமை அரசு தடை செய்ய வேண்டும். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இறைவன் புறத்திலிருந்து எதோ ஒரு விஷேசத் தன்மை வழங்கப்படுவது போல் அப்பாவி மக்கள் நம்புவதற்கு அவர்களது யூனிஃபாமும் ஒருக் காரணமாகிறது. இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மக்களுடன் அமர்ந்திருக்கும் பொழுது இதில் யார் இறைத்தூதுர் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு சாதாரண மக்களைப் போன்றே அவர்களும் உடை அணிந்து இருப்பார்கள்.

பிரசாதத்தையும், உண்டியலில் காணிக்கை செலுத்துவதையும் அரசு தடை செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனிடம் தனித்து தனது தேவையை கேட்கலாம் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் உள்ள இடைத் தரகர்களுக்கு ( அர்ச்சகர்களுக்கு ) கடவுள் தன்மை இருப்பது போல அப்பாவி மக்கள் நம்பி மோசம் போவதற்கு இடைத் தரகர்கள் (அர்ச்சகர்கள்) காரணமாகின்றனர். ( சிரமத்துடனும், மனக்கவலையுடனும் வரும் பெண்களையே அதிகம் வளைத்துப் போட்டதாக தேவநாதன் கூறியது ஆதாரமாகும் )

உயர்ந்த குலம், தாழ்ந்த குலம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல், எவரது சிபரிசுகளும் ஏற்கப்படாமல் குற்றவியல் தண்டனையை பாரபட்சமின்றி பொதுமக்கள் முன்னிலையில் வைத்து நிறைவேற்ற வேண்டும். போலீஸ் அதிகாரி வெற்றி வேல் அவர்;களை நட்ட நடுரோட்டில் கர்ண கொடூரமாக வெட்டி சாய்த்து ரெத்த வெள்ளத்தில் மிதக்க விட்டதை தொலைகாட்சியில் கண்ட அனைவருக்கும் மனம் துடியாய் துடித்தது இதைப்பார்த்த அவரது குடும்பத்தார் எத்தனை வேதனைப் பட்டிருப்பர் இவருடைய கொலையாளிகளை கண்டுப் பிடித்தப் பின்னர் அவர்களுக்கு ஒரு ஐந்தாண்டோ> பத்தாண்டோ சிறையில் அடைக்கப்பட்டு சுகாதாரமான> நீரும் உணவும் கொடுப்பதால் இதுப் போன்ற ஈவிறக்கமற்ற கொலைகாரர்கள் குறைவார்களா ? வளர்வார்களா  கொலைகாரர்கள் கண்டு பிடிக்கப்பட்டப்பின் அதே இடத்திற்கு கொண்டு சென்று பொதுமக்கள் முன்னிலையில் நிருத்தி அரசு அவர்களை வெட்டி சாய்த்து ரெத்த வெள்ளத்தில் மிதக்க விடாதவரை இதுப் போன்ற ஈவிறக்கமற்ற கொலைகாரர்கள் வளர்வதை தடுக்க முடியாது.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு  ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَن لَّا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

60:13. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் யாரை கோபித்து விட்டானோ அந்தக் கூட்டத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! (ஏக இறைவனை) மறுப்போர் மண்ணறைவாசிகள் (எழுப்பப்படுவார்கள் என்பது) பற்றி நம்பிக்கை இழந்தது போல் இவர்கள் மறுமையைப்1 பற்றி நம்பிக்கை இழந்து விட்டார்கள்.



திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே விபச்சார அழகிகள் நடமாட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



ஒரு காலத்தில் ஊரின் ஒதுங்குப் புறத்தில் மையிருளில் நடந்து வந்த விபச்சாரம் இன்று உலகின் மையப்பகுதிகளுக்கு சுடர் விடும் சூரிய ஒளியில் பகிரங்கமாக நடக்கும் காலம் வந்து விட்டது, இது மேலும் பல்கிப் பெருகி பிரசித்திப் பெற்ற தேவஸ்தானங்களின் அருகிலும் நெருங்கி விட்டது.

சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே விபச்சார அழகிகள் நடமாட்டம் என்று மேல்படி தகவலை ஊடகச் செய்தியின் வாயிலாக அறிந்தோம்.

மேற்கானும் தகவலை அறிந்த பக்த கோடிகள் புள்ளி விபரங்களுடன் தகவல் அளித்த எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து தகவலை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

இந்தியாவின் முக்கிய நகரங்களின் மையப்பகுதிகளில் போர்டு வைத்து விபச்சாரம் நடத்தும் செய்தி அறிந்து கொதித்தெழாத பக்தகோடிகள் ஏழுமலையான் கோயில் அருகே மட்டும் விபச்சார அழகிகள் நடமாடும் செய்தி அறிந்து கொதித்தெழுந்தது ஏன் ?

ஏழுமலையான் ஆலயம் இருக்கும் இடம் மட்டும் தான் புனித இடமா ? ஏழுமலையான் ஆலயத்திறகு வெளியில் உள்ள இடங்கள் புனித்துவம் வாய்ந்ததில்லையா ?

அவ்வாறெனில் இந்திய மண்ணை வணங்குகிறோம் எனும் வந்தே மாதரம் கோஷம் வெறும் வேஷம் தானா  ?

இந்திய மண்ணை வணங்குவதாக கூறுவது உண்மை என்றால் மண்ணின் எந்த மூளையில் விபச்சாரம் நடந்தாலும் பக்த கோடிகள் கொதித்தெழ வேண்டும் !

மண்ணை வணங்குவதாக கூறும் 'வந்தே மாதரம் கோஷம்' மாற்று மதத்தவர்களிடம் திணிப்பதற்காக மட்டும் தான் என்பதை மேல்படி சம்பவம் பட்டவர்த்தனமாக பறைசாற்றுவதாக அமைந்து விடும்.

தாய் மண்ணிலிருந்து விபச்சாரம் முற்றிலுமாக துடைத்தெறியப் படவேண்டுமென்றால் ?

புரட்டுங்கள் பெருமானாரின் வாழ்க்கைப் பக்கங்களை !

அகிலம் போற்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஏகஇறைவன் ஒருவனே என்ற பிரச்சாரத்தை மேற் கொள்ளும் முன் மக்கமா நகரம் விபச்சாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தீமைகளால் சூழப்பட்டிருந்து.

இன்று சகோதரத்துவத்தையும், ஏகத்துவத்தையும் பறைசாற்றக்கூடிய புனித கஃபா அமைந்துள்ள மக்கா நகரம். அன்று தீமையின் பிறப்பிடமாகத் திகழ்ந்தது ஆண்கள், பெண்கள் நிர்வாணமாக இரண்டரக் கலந்து புனித ஆலயத்தை வலம் வந்தார்கள்.

அண்ணலார் அவர்களுடைய ஏகத்துவப் பிரச்சாரம் தீமையில் மூழ்கித் திளைத்திருந்த மக்களை சென்றடைந்தப் பின் அவர்களை தலைகீழாகப் புரட்டி எடுத்து மக்காவும், மதீனாவும் ஒழுக்கத்தின் பிறப்பிடமாக அறிவின் ஊற்றுக் கண்களாக மாறிக் கொண்டது.

நகரத்தில் புறையோடிப் போயிருந்த தீமைகளை களைவதற்கு பெருமானார் அவர்கள் மண்ணின் மைந்தர்களுக்கு ஓறிரைக் கொள்கையை விதைத்து  மனமாற்றத்தை ஏற்படுத்தினார்கள் அதனால் அவர்கள் சிறந்த சமுதாயமாக மாற்றப்பட்டார்கள் !

அண்ணலார் அவர்கள் அந்த மக்களிடத்தில் இறைநம்பிக்கையை ஊட்டுவதற்கு முன் அவர்களிடமும் இறைநம்பிக்கை இருந்தது, அவர்கள் நாஸ்திகர்களாக இருக்கவில்லை அது எவ்வாறான இறைநம்பிக்கை என்றால் ? இன்றை இந்திய பக்தகோடிகளிடம் இருப்பது போன்ற (பலதெய்வ ) இறைநம்பிக்கையாக இருந்தது.

இவர்களுக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்
அவர்கள் உலகில் என்ன மாதிரியான மோசடியில் ஈடுபட்டு பொருளீட்டி சுகபோக வாழ்க்கையை அனுபவித்தாலும் அந்த குற்றத்திற்காக இறைவனிடத்தில் சிபாரிசு செய்து மன்னிப்பை பெற்றுத்தருவதற்கு மறைந்து சென்ற நல்லடியார்களும், இறைத்தூதர்களும் பொறுப்பேற்பார்கள் என்ற தவறான இறைநம்பிக்கை இருந்ததால் தாராளமாக தீமைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வந்தார்கள்.

இவர்கள் உலகில் என்ன மாதிரியான மோசடியில் ஈடுபட்டு பொருளீட்டி சுகபோக வாழ்க்கையை அனுபவித்தாலும் அந்த குற்றத்தை மறுபிறவியில் வேறொரு ஜீவராசிகளின் உருவில் பிறந்து பாவங்களைக் கழுவி தூய்மை படுத்திக் கொள்ளலாம் என்ற தவறான இறைநம்பிக்கை இருந்ததால் தாராளமாக தீமைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வந்தார்கள்.

•              இறைநம்பிக்கை இருந்தது,
•              தீமைகள் மாறவில்லை.

பெருமானார் அவர்கள் அந்த மக்களிடத்தில் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மக்களிடத்தில் தீமைகள் பலதை சுட்டிக்காட்டி இன்னவற்றை செய்யக்கூடாது மீறினால் இறைநம்பிக்கையாளனாக மாட்டான் என்றுக்கூறி முடிப்பார்கள். அதேப்போன்று நன்மையானவற்றை செய்யத் தூண்டும் காரியத்தைக் கூறி செயல்படுத்த வில்லை என்றால் இறைநம்பிக்கையாளனாக மாட்டான் என்றுக் கூறி முடிப்பார்கள்.

ஏகஇறைவன் ஒருவனே, அவரவர் குற்றத்திற்கு அவரவரே பொறுப்பாவார்; என்று சிந்திக்கத் தூண்டும் அறவுரைகளை அவர்களுடைய மனங்களில் ஆழமாக விதைத்ததால் அது நற்செயல்களை வளரச் செய்து தீமைகளை வேறோடு சாய்த்தது.

எந்தளவுக்கென்றால் ?

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்; (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்தால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.

மக்கள் அணி அணியாக வந்து இறைத்தூதர் அவர்களிடத்தில் இனிவரும் காலங்களில் தீமைகளை செய்ய மாட்டோம் என்று மேற்கானும் விதம் பட்டியலிட்டுக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். .

'புதியதோர் உலகம் படைப்போம்' என்றுக் கூறி அதை ஏட்டளவில் எழுதி வைத்திருப்பவர்களைப் பார்த்து வருகிறோம். அதை செயலளவில் கொண்டு வந்து சரித்திரம் படைத்தவர்கள் உலகில பெருமானார்(ஸல்) அவர்களைத் தவிற வேரெவரும் இல்லை என்று அடித்துக் கூறமுடியும்.

எந்தளவுக்கு என்று சொன்னால் ? அவர்களில் ஒருசிலர் மேல்படி தீமைகளில் எதையாவது செய்து விட்டால் கூட அதைத் தாமே முன்வந்துக் கூறி இஸ்லாமிய குற்றவியல் தண்டனையைப் பெற்றுக் கொண்டு உலகில் தங்களை தூய்மை படுத்திக் கொண்ட வரலாறு அவர்களுக்கு உண்டு.

உலகம் தோன்றியது முதல் இன்று வரை இதுபோன்று மக்களுடைய மனங்களை தலைகீழாகப் புரட்டி அவர்களைக் கொண்டு புதியதோர் உலகு படைத்த சாதனை பெருமானாரைத் தவிற வேறு எந்த சரித்திர நாயகனுக்கும் இன்றுவரை கிடையாது.

காந்தி அடிகள் கூறுகிறார்.
இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான், அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல 
- Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi.

வரலாற்று ஆசிரியர் லாமர்டின் கூறுகிறார்:
சமயக் கொள்கை இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, இறைவனின் ஒருமை, மற்றொன்று இறைவனின் ஸ்தூலப் பொருளற்ற தன்மை. முந்தியது இறைவன் என்றால் என்னவென்று உரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. ஒன்று தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது. மற்றொன்று பிரச்சார துணையால் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது. தத்துவப் போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப்பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒருகொள்கை வழி நாகரிகத்தை உருவாக்கியளித்த மாமேதை ஒரே ஆன்மீக தலைமையின் பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் 
---Lamartine, Historie de la Turquie, Paris 1854, vol II, pp. 2760277.

தேவஸ்தானம் மற்றுமல்லாமல் இந்திய மண்ணில் எந்த ஒரு இடத்திலும் விபச்சாரம் தலை தூக்காமல் இருக்க வேண்டுமெனில் பலதெய்வ நம்பிக்கையை துடைத்துதெறிந்து விட்டு ஓறிரை நம்பிக்கையை விதையுங்கள். மண்ணின் மைந்தர்களுடைய மனங்களில் மாற்றம் ஏற்படாதவரை மண்ணில் புரையோடிப் போயுள்ள தீமைகளை களையவே முடியாது .

இன்றும் இந்திய பாடப் புத்தகங்களில் பாரதியார் எழுதிய '' புதியதோர் உலகம் படைப்போம் கெட்டப் போரிடும் உலகத்தை வேறோடு சாய்ப்போம் '' என்றுக் கூறிய தத்துவத்தை பாடுவதோடு நிருத்திடாமல் புதியதோர் உலகு படைக்க புரட்சி மிக்க சமுதாயத்தை ஏகஇறைவன் ஒருவனே! என்ற அடிப்படையில் உருவாக்குங்கள்.

ஏகஇறைவன் ஒருவனை மட்டும் ஏற்றுக்கொண்டோம், திருட மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம், அநியாயமாக எவருடைய உயிரையும் கொலை செய்;ய மாட்டோம் என்று மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளாதவரை இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் எந்த மூளையிலும் விபச்சாரம் கடவுள் ஆலயம் வரை நெருங்குவைதை எவராலும் தடுக்க முடியாது.

60:12. நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து ''அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

.

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .


وَلاَ تَقْرَبُواْ الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاء سَبِيلاً

17: 32. விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.



குஷ்பு ???

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். . .

இஸ்லாம் பெண்ணுரிமைப் பேனுவதில்லை அவர்களை பர்தா என்கிற காட்டுமிராண்டி சட்டத்திற்குள் முடக்கி வைத்திருக்கிறது எதை நாம் மறைக்கிறோமோ அதைப் பார்ப்பதில் தான் பிறருக்கு ஆர்வம் தோன்றும் அதனால் அதை திறந்து விட்டால் அந்த வேகம் குறைந்து விடும் என்றெல்லாம் கேள்வி தொடுப்போருக்கு இஸ்லாமிய  மார்க்கத்தில் பிறந்து வளர்ந்து இஸ்லாம் கூறும் பர்தா சட்டத்தை உடைத்துக் கொண்டு அல்லது அதைப் பேனாது வெளியேறிய குஷ்பு ஒரு உதாரணமாகும்.


திமணத்திற்கு முன்பு கண்டவர்களுடனும் கள்ள உறவில் ஈடுபடலாம், எயிட்ஸ் வராமல் பார்த்துக் கொண்டால் போதும் என்கிற புரட்சி கரமானக் ? கருத்தைக் கூறினார், இக்கருத்தை சில அதிமேதாவிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் கூட ஆதரித்து அறிக்கைகள் விட்டார்கள், பல நற்சிந்தனை வாதிகள் எதிர்க்கவும் செய்தார்கள். 

இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த குஷ்புவை அவரது பெற்றோர் இஸ்லாம் கூறும் பர்தா சட்டத்தின் வார்ப்பில் வார்த்து எடுத்திருந்திருப்பார்களேயானால் பேனிப் பகாதுகாக்க வேண்டிய கற்பை கண்டவன் நின்டவனுக்கும் பகிர்ந்து பங்கீடு செய்யலாம் என்றுக் கூற முன் வந்திருக்க மாட்டார், பிற சகோதரிகளுக்கும் இத் தீமையை அறிமுகப்படுத்தி அதில் ஆர்வமூட்டியிருக்கமாட்டார்.

யாம் பெற்ற இன்பம் வையகம் யாவினிலும் என்பது நல்லோரின் கருத்து, யாமடைந்த தீமை க(ள)லவு வையகம் யாவுக்கும் என்பது தீயோரின் கருத்து, தான் விழுந்த பாதாளத்தில் பிறரையும் வீழ்த்தி மகிழ்வதில் சில சேடிஸ்டுகள் மும்முறமாக செயல்படுவார்கள், அந்த வகையில் குஷ்பு ஒரு சேடிஸ்டாகும். சரி சேடிஸ்டுகளோடு அது ஒரு சேடிஸ்டாக இருந்து கொள்ளட்டும் அவர்களுடைய கூற்றுக்களை ஆதரித்து அறிக்கைகள் விட்டவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?


இறைவனால் அனுப்பப் பட்ட எந்த வேதமும் விபச்சாரத்தை அனுமதிக்க வில்லை அனைத்து வேத கிரந்தங்களுமே விபச்சாரத்தை தடுக்கிறது. (வேதம் பெறாதவர்களில் பல நற்சிந்தனைவாதிகளும் விபச்சாரத்திலிருந்து பரவும் கொடிய நோயின் தாக்கமறிந்ததால் எதிர்ப்பர்.).


ஹிந்து மத வேதங்கள் சிதைக்கப் பட்டதாலும், அது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வளையத்திற்குள் முடங்கி விட்டதாலும், ஹிந்து மதத்தின் மற்றப் பிரிவினர்கள் திருவள்ளுவர், பெரியார் போன்றோருடைய கருத்துக்களை வேத வாக்காக எடுத்துக் கொண்டார்கள். அவ்வப்பொழுது திருக்குறளுக்கு கருனாநிதி ஒரு கருத்தும் கன்னதாசன் ஒருக்கருத்தும் தெரிவிப்பார் எவரதுக் கருத்து ஓங்கி நிற்குமோ அது தான் இறுதியில் உண்மை வடிவம் பெறும் (காரணம் பாமரர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் நடையில் உள்ளத் தமிழ் அல்ல திருக்குறள் தமிழ்).


இன்று குர்ஆனைத் தவிர மற்ற அனைத்து வேதக் கிரந்தங்களும் மனிதக்கரங்களின் ஊடுருவலால் சிதைக்கப்பட்டு ஒவ்வொருவரும் தான்தோன்றித் தனமானக் கருத்துக்களை வெளியிடத் தொடங்கியதன் வெளிப்பாடே குஷ்புவடைய சமூக சீரழிவுப் பேச்சும், அதை ஆதரித்துக் கருத்துத் தெரிவிக்கும் முற்போக்கு வாதிகளுமே என்பதை விளங்கிக கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்னக் கூறுகிறது.

உலகப் பொதுமறை திருக்குர்ஆனின் நடை பாமரனும் புரியும் விதம் மிக எளிமையான நடையில் இருக்கும் அதன் மூல மொழியிலிருந்து உலகில் உள்ள எந்த மொழிக்கு மாற்றம் செய்தாலும் படிப்பதற்கு மிக எளிதாகவே இருக்கும் ஆளாளுக்கு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இராது. எந்த ஒரு சமூகப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, தனது வாழ்வியல் பிரச்சனையாக இருந்தாலும் குர்ஆனைப் புறட்டினால் தெளிவான விடை கிடைக்கும்.

அல்லாஹ் ஒரு விஷயத்தை மனித சமுதாயத்திற்கு கடமையாக்கி வானவர் மூலம் தனது மெஸேஞ்சர் முஹம்மது நபிக்கு அனுப்புவான் அவர்கள் அந்த மெஸேஜை ரிஸிவ் செய்து மக்களுக்கு அறிவிப்பார்கள் அத்துடன் அவர்களுடைய பணி முடிந்ததா என்றால் இல்லை, அவ்விஷயத்தை முதலில் தங்களுடைய வாழ்க்கையிலும், தங்களுடைய உறவினர்கள் தொடங்கி தங்களது தோழர்கள் வரை அதை நடைமுறைப் படுத்தி சமுதாயத்தில் புழக்கத்தில் விட்டு அந்த இறைவசனத்திற்கு உயிர் ஊட்டுவார்கள், அத்துடன் வாழையடி வாழையாக ஒவ்வொரு தலைமுறையினரும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அவைகளை மக்களிடம் அறிவிக்கச் சொன்னார்கள்.

அல்லாஹ்விடமிருந்து வந்த இறைச்செய்தி ஒன்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தி தனது சமுதாய வழித் தோன்றல்களுக்கு கடமையாக்கினார்கள் என்பதை கான்போம்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. மேலும் அது (மனித குலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழி மிகக் கெட்டதாகும் அல்குர்ஆன்: 17- 32.


அண்ணலார் கூறுகிறார்கள்
''யார் தனது இரு தாடைகளுக்கிடையிலுள்ள ஒன்றை (நாவை)யும், தன் கால்களுக்கிடையிலுள்ள ஒன்றை (மறை உறுப்பை)யும் பாதுகாப்பதற்காக பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சுவனம் கிடைப்பதற்காக நான் பொறுப்பேற்கின்றேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஸஹ்லுப்னு ஸஃது நூல்: புகாரீ.6474


வாழ்நாள் முழுவதையும் தியானத்தில் கழிப்பவருக்கும் லட்சம், லட்சமாகவும் கோடி கோடியாகவும் தர்மம் வழங்குபவருக்கும் கூட கிடைக்காத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிபாரிசு உலகில் விபச்சாரம் செய்யாமல் கற்பை பேணிக் காத்து பரிசுத்தத் தன்மையுடன் வாழ்ந்தவருக்கு அவருடைய மற்ற விஷயங்களுக்காக மறுமையில் அல்லாஹ்விடம் பறிந்துரைப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விபச்சாரத்தை ஆரம்பத்திலேயே வேரோடும், வேரடி மண்னோடும் பிடுங்கி எரிந்து விட்டார்கள்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில் தனது மருமகனார் அலி (ரலி) அவர்களுடன் நடந்து செல்லும் பொழுது அவர்களது எதிரில் ஒரு அழகான பெண் வருகிறார் அப்பெண்ணை அலி (ரலி) அவர்கள் பார்த்து விடுகிறார்கள், ஓறிரு எட்டுகள் எடுத்து வைத்தப் பின் அப்பெண்ணை மீண்டும் பார்க்க எண்ணம் தோன்றுகிறது திரும்புகிறார்கள் கண்ணிய நபியவர்கள் அவர்களுடைய புஜத்தில் கை வைத்து திருப்பி விட்டு ''அலியே! ஒரு முறை (யதார்த்தமாக) முதல் பார்வை பார்க்க உமக்கு அனுமதியுண்டு; இரண்டாம் முறை நீர் பார்ப்பது கூடாது'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைது இப்னுல் ஹுஸைப் (ரலி) ஆதாரநூல்: அபூதா¥து.
 
ஒரு பார்வை பெண்களின் மீது பட்டுவிடுவதை குறை காணமுடியாது, அது யதார்த்தம், அதேப்பார்வையை மீண்டும் அப்பெண்ணின் பக்கம் திருப்பிவிட்டால் அது விபச்சாரத்திற்கு கண்டிப்பாக வழித்தடம் அமைத்துவிடும் காரணம் இரண்டாவது முறைப் பார்க்கும்போது அப்பெண்ணிடமிருந்து எதிர்ப்பு வரவில்லையெனில், பின் தொடர ஆர்வம் ஏற்படும், பின் தொடரும் போதும் எதிர்ப்பு வரவில்லையெனில் அன்றே அவன் விபச்சாரத்தில் வீழ்ந்து விட வில்லையென்றாலும் தாமதித்தேனும் போய் வீழ்வான். அதனால் பெண்ணின் மீது செலுத்தும் இரண்டாவது பார்வையை அன்றே தனது உறவுக் காரரான அலி (ரலி) அவர்களிலிருந்து தடை செய்கிறார்கள்.

மேலும் கண்ணிய நபியவர்கள் தனது தோழர்களிடம் கீழ்கானுமாறு கூறினார்கள் ''திருமண உறவு (மனைவி) தவிர உங்களில் யாரும் வேறு பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் நூல்: முஸ்லிம். 4383


மனைவி தவிர மற்ற உறவுப் பெண்களுடனோ, அல்லது அன்னியப் பெண்களுடனோ தனித்திருக்கக் கூடாதென்றும் வற்புருத்திக் கூறினார்கள். காரணம் உறவு முறைகளை சொல்லிக் கொண்டு தான் முதலில் பழகுவார்கள் ஆரம்பத்தில் இருவருமே தங்களை யோக்கியர்களாக ஒருவர் மற்றவரிடம் காட்டிக் கொள்வதில் தீவிரமாக நடிப்பார்கள். அவர்களுடைய நடிப்பை அறிந்த ஷைத்தான் இதெல்லாம் ஒன்றுமில்லை படைக்கப்பட்டதன் நோக்கமே அனுபவிக்கத் தான் என்பது போலவும், வியாதி வராமல் பார்த்துக் கொண்டால் போதும் என்பது போலவும் எடுத்துக் கூறி தனது பங்களிப்பை செலுத்தி அவர்களை அழிவில் இட்டுச் சென்று விடுவான் அத்துடன் அவன் பணி முடிந்து விடும் அதன் பிறகு அதில்போய் வீழ்ந்தவர்கள் தங்களுக்குத் துனையாக இன்னும் பலரையும் அழைத்துக் கொள்வார்கள்.

அதனால் பெருமானார் அவர்கள் ஆண், பெண் இருவருடைய தனிமையை ஆரம்பத்திலேயே தடை செய்து விடுகிறார்கள். ஒவ்வொரு தீமைகளையும் அது நுழையும் அதன் நுழைவு வாயில்களில் வைத்தே நசுக்கி விடுவார்கள்.


இவ்வாறாக மார்க்கம் விபச்சாரத்தை தடுத்திருப்பதுடன் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் அனைத்து வழிகளையும் தொடர்புகளையும் அடைத்து விடுகிறது. அதனால் தான் பெண்கள் பர்தா அணிய வேண்டும், ஆண்கள் அன்னியப் பெண்களுடன் தனித்திருக்க கூடாது என்று கட்டளையிட்டுள்ளது.

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே ! உங்களுடைய பிள்ளைகளை இஸ்லாம் கூறும் பர்தா சட்டத்தில் வளர்த்தெடுக்க முயற்சி செய்யுங்கள் குஷ்பு போன்றவர்கள் உருவாகமல் பாரத்துக் கொள்ளுங்கள்,

அன்புள்ள சகோதரர் மார்க்ஸ் அவர்களே !
உங்களுடைய பல ஆக்கங்களை நான் படித்தவன் என்கிற முறையில் உங்களை ஓர் நல்ல சிந்தனைவாதி என்ற முறையிலும், தங்களுடைய குஸ்பு ஆதரவுக் கருத்தின் மீது சிறிய ஓர் விமர்சனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

மனிதகுலத்தை அழிவின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும் மாபெரும் தீமையை இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத பெரியோர் முதல், சிறியோர் வரை விட்டு வைக்காத உயிர்கொல்லி நோயை (எயிட்ஸை) உருவாக்கும் விபச்சாரத்தை ஆதரிக்கும் நடிகையின் நச்சுக்கருத்தை, ஆதரித்து அறிக்கை விட்டது உங்கள் வாசகராகிய எம்போன்றவர்களுக்கு ஒரு மாதிரியான நெளிசலை ஏற்படுத்திற்று, கருத்து சுதந்திரம் என்கிற பேரில் அடுத்தவனின் உரிமையின் மீது, ஒழுக்கத்தின் மீது, கண்ணியத்தின் மீது கைவைக்கக் கூடாது, சுதந்திர இந்தியாவில் அவரவர் தங்களது நல்லக் கருத்துக்களை பறிமாரிக் கொள்ளலாம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் நாசமாக்கும், இழிவுபடுத்தும் நச்சுக்கருத்துக்களை பரிமாறக்கூடாது, ஊடகங்களும் முன்னுரிமை வழங்கக் கூடாது என்பதை; புரிந்து கொள்ள வேண்டும் ஒரு தீமையை தான் நேரடியாக செய்வதை விட வேறொருவன் அதை செய்வதற்கு மறைமுகமாகவும், அல்லது வெளிப்பாடையாகவும் தூண்டுவது, ஆதரவளிப்பது மாபெரும் தீமையாகும்.

'
ஹலாலும் (அனுமதிக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஹராமும் (தடுக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஆனால் இவ்விரண்டுக்குமிடையே சந்தேகத்திற்குரிய சில விஷயங்கள் உள்ளன. சந்தேகத்துக்குரிய பாவங்களிலிருந்து விலகி இருப்பவன் பகிரங்கமான பாவங்களிலிருந்தும் கண்டிப்பாக விலகியே இருப்பான். சந்தேகத்திற்குரிய பாவங்களில் துணிவுடன் ஈடுபடுபவன் வெளிப்படையான பாவங்களில் வீழ்ந்துவிட பெரிதும் வாய்ப்புண்டு. பாவங்கள் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட பகுதிகளாகும் (அவற்றினுள் நுழைந்திட அனுமதியில்லை, அதனுள் அத்துமீறி நுழைந்துவிடுவது குற்றமாகும்.) தடை செய்யப்பட்ட பகுதியின் அருகே மேய்கின்ற பிராணி அதனுள் புகுந்துவிட பெரிதும் வாய்ப்புண்டு.' (புகாரி, முஸ்லிம்) அறிவிப்பாளர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


மேற்கானும் நபிகளாரின் பொண்மொழிக் கூறுவதின் சுருக்கம் நல்வழி எது ? தீயவழி எது ? என்று ஓரளவு தனது பகுத்தறிவு கிரஹித்துக் கொள்ளும், அதன் மூலம் நல்வழிகளுக்குள் தன்னை தாமதமின்றி நுழைத்துக் கொள்ளவும், தீயவழியின் பக்கம் அறவே தங்களை செலுத்திடாமல் இருக்கவும் கூறுகிறது. சில பாவகாரியங்களின் மீது சந்தேகம் ஏற்படலாம் அவ்வாறு சந்தேகம் வரும் ஒரு விஷயத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும் அவ்வாறு நடந்து கொண்டால் , அப்பயிற்சி சந்தேகமற்ற பெரும்பாவத்தில் வீழ்ந்து விடாமல் தன்னை தடுத்துக் கொள்ளும் என்பதாகும்.


இஸ்லாமிய மதத்தில் பிறந்த குஷ்புவை அவரது பெற்றோர் இஸ்லாம் கூறும் பர்தா சட்டத்தின் வார்ப்பில் வார்த்து ( வளர்த்து ) எடுத்திருந்திருப்பார்களேயானால் பேனிப் பகாதுகாக்க வேண்டிய கற்பை கண்டவன் நின்டவனுக்கும் பகிர்ந்து பங்கீடு செய்யலாம் என்ற நச்சுக் கருத்தைக் கூற முன் வந்திருக்கமாட்டார், பேனிப் பகாதுகாக்க வேண்டிய கற்பை கண்டவன் நின்டவனுக்கும் பகிர்ந்து பங்கீடு செய்ய முன் வந்திருக்க மாட்டார், பிற சகோதரிகளுக்கும் ஆர்வமூட்டியிருக்கமாட்டார் ஆர்வமூட்டும் சினிமாத் துறையை தொழிலுக்கு தேரந்தெடுத்திருக்க மாட்டார்.
 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்